
‘‘இதெல்லாம் என்ன சார் மேஜிக்? இந்தோனேஷியா போய்ப் பாருங்க. மழை மேகம் ‘வா’ன்னா வரும். ‘போ’ன்னா போகும். ரிப்பேராகிப்போன உங்க வீட்டு கார், ஸ்கூட்டர், லாரி, பஸ் எதுவா இருந்தாலும் ஒரு ‘சூ மந்திரக்காளி’ போட்டா, பக்காவா ரெடியாகிடும். கத்தியில்லாம வெறுங்கையால ஆளையே தொடாம ஆபரேஷன் பண்ணுவாங்க’’ என்று தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் அம்மணி ஒருவர்.
‘‘பிசினஸ் விஷயமா பத்து வருஷங்களுக்கு மேலாக நான் குடும்பத்தோடு இந்தோனேஷியாவில் வாழ்ந்திருக்கேன். அது ஒரு முஸ்லிம் நாடுன்னாலும் பண்டைய பாரதத்தின் இந்துக் கலாச்சாரம் இன்னமும் அங்கே இருக்கு. வியாபாரத்துக்காக குஜராத்தில் இருந்து சென்ற முஸ்லிம்கள், அங்கிருந்த மன்னர்களை முஸ்லிமாக மாற்றியிருக்கின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே என்று, மக்களும் முஸ்லிமாக மாறியிருக்கிறார்கள். ஆனால், அவர்ளின் நம்பிக்கை மாறவில்லை. அங்குள்ள இஸ்லாமியர்கள், இந்துக்களைப் போலவே செத்துப் போனவர்களுக்கு நீத்தார் கடன் செய்கிறார்கள். வெத்திலைப் பாக்கு, ஊது பத்தி ஏற்றி உறவினர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள்’’ என்று சின்ன முன்னுரை கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.
‘‘இந்தோனேஷியா ஒரு வளமான பூமி. அடிக்கடி அங்கே மழை பெய்றதால விவசாயம், பொது நிகழ்ச்சி எல்லாத்துக்கும் இடைஞ்சலா இருக்கும். கல்யாணம், பொதுக்கூட்டம், அரசு விழாக்கள், கோயில் விழாக்கள்னு மக்கள் கூடுகிற எந்த விஷேஷமா இருக்கட்டும். மழை வரும்ங்கிற சந்தேகம் இருந்தா, காசு கொடுத்து ‘பவன் ஹூஜான்’(bavang hujan) என்கிற மந்திரவாதிகளைக் கூட்டி வருவாங்க.
புகையிலை, கிராம்பு ஏற்றுமதிதான் அந்நாட்டின் முக்கியத் தொழில். கிராம்பை வைத்து ஸ்பெஷலாக வாசனை சிகரெட்டுகளை தயார் செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அறுவடையின்போது மழை பெய்துவிட்டால், லட்சக் கணக்கில் நஷ்டமாகிவிடும். எனவே குறைந்த கூலி வாங்கிக் கொண்டு மழையை விரட்டியடிப்பது ‘பவன் ஹூஜான்’கள்தான். இவர்கள், சம்பவ இடத்தில் மந்திரங்களை ஓதி முதலில் தூய்மை படுத்துவார்கள். பிறகு வானத்தை நோக்கி கண்களைச் சுழற்றியபடி கைகளை அகல விரித்துத் தள்ளுவார்கள். என்ன ஆச்சர்யம்! திரண்டிருக்கும் மேகங்களெல்லாம் மிரண்டு ஓடிவிடும். இவையெல்லாம் நான் பார்த்து அனுபவித்த விஷயங்கள்’’ என்றவர், ஸ்பெஷலாக இந்தோனேஷிய டீ ஒன்றை எனக்காக போட ஆரம்பித்தார்.
அவர் சொல்வதை மெய்ப்பிக்கும் விதமாக, பி.பி.சி செய்தியாளரான ‘ரேச்சல் ஹார்வி’ 2003&ம் ஆண்டு இந்தோனேஷியாவில் தான் சந்தித்த ‘அபா ஹாஜி ஒதாங்’(aba haji otang) என்கிற 84 வயது ‘பவன் ஹூஜான்’ பற்றி இப்படிக் கூறுகிறார்.

என்ன செய்ய? சில நிமிடம் கழித்து, மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. நான், ‘பவன் ஹூஜாங்கின் பிரார்த்தனையைக் குலைத்துவிட்டதாக’ மக்கள் பேசிக் கொண்டார்கள். விடைபெறும்போது ஹாஜி என்னிடன் சொன்னார். ‘இந்த வாரம் கடற்படையில் பிரிவுபசார நிகழ்ச்சி ஒன்றுக்காக மழையைத் தள்ளிவைக்கப் போகிறேன். அன்று என்னோடு வருகிறாயா?’.
-சூடான டீயுடன் வந்த அம்மணி, அடுத்த அதியசத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.


ஃபிரன்ட் ஒருத்தரை துனைக்கு அழைச்சிட்டு, நானும், என் மகனும் ‘தோமாக்’ கிளம்பினோம். ‘பிரபாத்’ங்கிற இடத்திலிருந்து கப்பல்லதான் ‘தோமாக்’ போயாகணும். ஆட்களை கூட்டிட்டுப் போக மூன்று மாடிக் கப்பல் ஒண்ணு காத்திருந்தது. சொன்னா நம்புவீங்களா? யாரும் வரலைங்கிறதால மூணு மாடிக் கப்பல்ல நாங்க மூணே பேர்தான் தீவுக்குப் போனோம். அந்தளவுக்கு அங்கே டீசல் விலை குறைவு.
எல்லாரும் சொன்ன மாதிரியே கடையெல்லாம் திறந்து கிடந்தது. அங்கே வசிக்கும் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறவர்களாக இருந்தார்கள். யாருக்காவது உடம்புல நோய் வந்தா ‘இபு ஜாமு’ங்கிற பெண் மருத்துவச்சிகள்தான் வைத்தியம் பார்ப்பாங்களாம். வெறும் கையினால் தொடாமலே உடம்பைக் கீறி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஆபரேஷன் செஞ்சிட்டு, பிறகு காயமே இல்லாமல் மூடிவிடுவார்கள்’ன்னு அங்கிருந்தவங்க சொன்னாங்க. என்னால் அதை நேர்ல பார்க்க முடியலையேங்கிற வருத்தம் இருந்துச்சு. அங்கிருந்தபோது, ‘மந்திரக்கட்டு நம்பளை ஏதாவது செஞ்சிடுமோ!’ங்கிற பயத்தோடவே நாங்க ஜகார்த்தாவுக்கு திரும்பி வந்தோம்’’ &படபடப்பாய்த் தன் அனுபவங்களைச் சொல்லி முடித்தார் அம்மணி.
இப்போ நமக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு.
1. பீரோ புல்லிங் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க தோமாக் தீவின் மந்திரக்கட்டு ஆசாமிகளை நம்மூருக்கு அழைத்து வரலாம்.
2. ‘கெதோக் மேஜிசியன்’களை கூட்டிவந்து கார், பைக்கை ரிப்பேர் செய்து கொள்ளலாம்.
3. முக்கியமாக, எப்பாடு பட்டாவது ‘பவான் வூ§ஜான்’களை கூட்டி வந்துவிட்டால் காவிரிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
-என்ன கரீட்டா...?
2 comments:
உள்ளூர் லகுடபாண்டிகளின் தொழில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் உங்கள் யோசனையை ம.க.இ.க சார்பாக கண்டிக்கிறேன்.
இது ரொம்ப அழிச்சாட்டியமால்ல இருக்கு?
Post a Comment