Showing posts with label fruit. Show all posts
Showing posts with label fruit. Show all posts

Saturday, November 18, 2006

பனம்பழம் பொறுக்கிய நாட்கள்:


''பனம்பழம் சுட்டு பசியாறப் படிப்போம்'' -கவிஞர் ஆலா.


சினிமாக்களில் பார்த்திருக்கிறேன், பனக்கார வீடுகளில் சாப்பாட்டு மேசையின் மீது கணக்கிலடங்காத பழவகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

''யப்பாடா சாப்பாடுலாம் சாப்டுட்டு எப்பிட்றா இந்த பழத்தையும் துன்னுவானுங்க'' என்று நினைத்துக் கொள்வேன். எனது இளமைக் காலங்களில் ஆப்பிள் முதலான பழவகைகளை பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை. பழம்னா அது பனம்பழம் தான்.


ராத்திர்லதான் பனம்பழம் பொறுக்கப் போவனும். சும்மா படுத்து தூங்குனா ஊட்ல கேழி கேப்பாங்க. அதனால படுக்கப் போறதுக்கு முன்னாலயே பிளான் பன்னிட்டுதான் படுப்போம்.


பனம்பழம் பொருக்கறது ஒன்னும் சாதாரண வேல இல்ல. ராவு நேரத்துல கொள்ளிக்கட்டி பிசாசுங்க, மோகினிங்க எல்லாம் சுத்தும். அப்பலாம் ஊட்டாண்ட கரண்ட்டு ஏது. ஒரே பயங்கிற இருட்டா இருக்கும்.


பேய்ங்களுக்கு டோ க்கா[அல்வா] குடுக்குறதுக்கு இன்னா பன்னுவோம்னா! ஒரு தடி ஒன்னு சீவி, அதும் மொனைல இரும்பு புடி ஒன்ன போட்ருவோம். இரும்பு ன்னாத்தான் பேய் கிட்ட வராதே! மீறி பேய் கிட்ட வந்திர்சின்னா ''அடித்... தொடப்ப கட்டயால, செருப்பு பிஞ்சிடும், பீய கரச்சி மூஞ்சில ஊத்திடுவேன்''னு சொல்லனும். அப்டி கேட்டா பேய் ஒடிடும். அதுக்கும் மசியலன்னா ஓடாம நின்னுக்கினு நம்பள சுத்தி மூத்திரம் பேஞ்சிக்கனும். ஏன்னா மூத்திரத்த தாண்டி பேய் உள்ள வராது.


அதோட முடிஞ்சிடுச்சா பிரச்சினைன்னா இல்ல. பனம்பழம் ஒன்னும் ரோட்ல கடக்காது. மரத்த சுத்தி நெறைய பொதருங்க இருக்கும். பொதரு இருந்தா கண்டிப்பா அதுல பாம்பு இருக்கனுமே. பயந்தா ஆவுமா? பனம்பழம் அதுலதானே கடக்கும். கைல வச்சிங்கிற கொம்பால தட்டிப் பாத்து, பழம் இருந்ததுனா எடுத்துக்குவோம்.


இப்பிடித்தான் ஒரு நாளு, பாலாஜி கொட்டாவுல ரெண்டாவது ஆட்டம் சினிமா பாத்துட்டு, நடு ராத்திரிலேயே போய் பனந்தோப்ல படுத்துக்க்கினோம். திடீர்னு யாரோ பொரன்ற மாரி சத்தம் கேட்டுச்சி.


கண்ணத்தெறந்து பாத்தா, ''அன்னாத்த ஒர்த்தரு மரத்து மேல ஏறிக்கினு கீறேரு. அவுரு திட்டம் இன்னானா, அவுரா பனம்பழத்த புட்டு போட்டுட்டு யார்னா கீழ வந்து பொறுக்குனாங்கனா ஒரே அமுக்கா அமுக்கிற்ரது.''
நல்ல வேள! பாத்துட்டோம். கழிசல் புடுங்கிச்சு எங்களுக்கு. புடிச்சம்ப஑ரு... ஓட்டம். ஓட்டம்னா, அப்பிடி ஒரு ஓட்டம். நேரா ஊடு வந்து சேந்துட்டோம்.


எங்க மேல தொடந்து வர்ற பேயி ஊட்டு உள்ள பூராம இருக்கிறதுக்கு செருப்பும், தொடப்பக்கட்டயும் சேத்துக்கட்டி ஊட்டு வாசல்ல தொங்க உட்ருவோம். குடுகுடுப்புகாரங்கிட்ட தாயத்து கட்டி, விபூதி குங்குமம்லாம் பாக்கெட்ல வச்சிகினுதான் மறுநாள்ல இருந்து பனம்பழத்துக்கு போறது.