Thursday, May 26, 2011

3-ம் தேதி முதல் ‘அ’வுக்கும் ‘இ’வுக்கும் மு.க. போடுகிறார் முழுக்கு!


தனது பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி முதல் அரசியலுக்கும் அதனோடு சேர்த்து இலக்கியத்துக்கும் முழுக்குப் போடுகிறார் மு.கருணாநிதி. இதற்கான அறிவிப்பும் 3-ம் தேதியன்றே வெளியாகவிருக்கிறது.

“தலைவா! இலக்கியப் பணியை மட்டும் தயவு செய்து விட்டுவிடவேண்டாம்” என்று தொண்டர்கள் யாராவது உண்ணாவிரதம் இருந்தாலோ, தீக்குளிக்க முயன்றாலோ, இலக்கியத்தை மட்டும் தொடர்வது என முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கட்சியையும், கனிமொழியையும் காப்பாற்றும் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியிலிருக்கும் ஐந்து ஆண்டு காலமும் அழகிரியை அடக்கி வாசிக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வை.கோ.வை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக தெரிகிறது.

மாறன் குரூப் குறித்த தகவல்கள் ஏதும் தற்போதைக்கு இல்லை.

Thursday, January 27, 2011

"முதல்ல இந்த நடிகப்பசங்களை ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும்." -எடிட்டர் லெனின்


சென்னை சங்கமம் நடத்திய ‘நாளைய சினிமா’ மூன்றாவது பதிவு.

‘‘மைனா படத்துக்கு என்னைக் கூப்பிட்டு கரெக்ஷென் பண்ணச் சொன்னாங்க. நான் படத்தைப் பார்த்துட்டு, கலைப்புலி தானுகிட்ட சொன்னேன். அப்படியும் அவர், படத்தை வாங்கலை. அது நாளைய சினிமாதான்.

நாளைய சினிமா வரணும்னா, முதல்ல தியேட்டர் கிடைக்கணும். அதுக்கு கிராமங்கள் தோறும் சின்னச் சின்ன தியேட்டர்களை அரசாங்கம் கட்டணும். சிட்டில ஏன் இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறாங்க? இப்போ, ஒரு வாரத்துக்கு எவ்வளவு வேணும்னாலும் வித்துக்கலாம்னு சொல்றாங்க. இதெல்லாம் எந்தப் படத்துக்காக? 200 ரூபா கொடுத்து படம் பார்க்கிறவன் யாரு? நீங்க சொல்ற அந்த மஃப்ஸல் மக்களா? இல்லையே!

நான் அஞ்சாதே படம் பார்த்தேன். ஏன் அந்தப் படத்துக்கு பெஸ்ட் டைரக்டர் விருது கொடுக்கலை? காரணம், கமிட்டி. கேரளாவுல என்னை கூப்புடுறான்யா கமிட்டிக்கு. நேஷனல் அவார்டு தேர்ந்தெடுக்க டெல்லிக்கு கூப்பிடுறான். ஆனா, தமிழ்நாட்ல மட்டும் கூப்பிடவே மாட்றான். இங்க நீதிபதி, நீதியரசர்லாம் வேண்டாம். அவங்களுக்கு என்ன தெரியும்? அதுக்கு பதில் ஞானராஜசேகரன், ட்ராட்ஸ்கி மருது, எஸ்.பி.ஜனநாதனை உட்கார வை. அப்பத்தான், நாளைக்கு நல்ல படம் வரும்.

இந்த நீதியரசர்லாம் இருக்கக்கூடாது. இதை நான் இருபது வருஷத்துக்கு முன்னாடிலருந்து சொல்லிட்டு வர்றேன். வள்ளுவர் கோட்டத்துல நான், ஜனநாதன்லாம் நின்னு துன்டறிக்கை கொடுத்தோம். போலீஸ் என்னை ‘வெளிய போ’ன்னு சொல்லிட்டாங்க. நாளைய சினிமா நல்லதா வரணும்னா, முதல்ல இந்தக் கமிட்டி ஒழியணும்.

எல்லாரும் சொல்றாங்க.
‘நாயகன்.’
26 ஆயிரம் அடிபா. மனிரத்னம்ங்கிறதால ‘ஆ...’ ன்னு நினைக்கக்கூடாது.
இதுல அமானுஷ்யம் ஒண்ணும் கிடையாது.
26 ஆயிரம் அடி எடுத்துட்டா! யார் அப்புறம் ராஜா? ஐ ச்சூஸ் மை டைரக்டர்.

நான்தானய்யா. எடிட் பண்றோம். ஸ்ரீதர் சார் வந்து கேட்கிறார்.

‘என்ன பண்றீங்க லெனின்?’
‘நாயகன்’
‘குட் பார்ட் ஆஃப் த ஃபில்ம் வில் பி இன் த ஸ்கிரீன்ல?’ அப்டீன்னார்.

எனவே, வாட் ப்ளே யூ ஆர் சீயிங் ஆன் த ஸ்க்ரீன், தட் இஸ் கால்டு ஸ்க்ரீன் பிளே.
அப்படீன்னு நான் சொல்லலை. பீம்சிங்கே சொன்னது.

ஜெயகாந்தன்லாம்கூட ஒண்ணுமில்லை. சொல்ல முடியும். எப்டி எழுதினாங்க. அது எப்டி எடுக்கப்பட்டதுன்னு. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ரிலீசாகி பத்தே நாள்ல அடுத்த படம் வருது.

ரசிகர்கள் கரெக்டாதான் இருக்காங்க. ஆனா, முதல்ல இந்த நடிகப்பசங்களை ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும்.

இதை நான் முதல்லேர்ந்து சொல்லிகிட்டு வர்றேன்பா. பீராபிஷேகம் பண்றானுங்க. பீரை, நீயாவது குடிச்சித் தொலையேன்டா. நாற்பது நாப்பத்தஞ்சு வருஷமா ரெண்டு பேர், ரெண்டு பேராதான் வந்துட்டு இருக்கான், தமிழ் சினிமாவுல. பாக்கறீங்களா? அந்தக் காலத்துலேர்ந்து.

இதெல்லாம் ஹிஸ்ட்ரிபா. அது ஏன் ரெண்டு பேர் மாத்திரம் வர்றான்? நார்த் இன்டியால பாருங்க. வதவதன்னு வந்துட்டு இருக்கான். காதலிக்கும்போது பின்னாடி பத்திருபது பேர் ஆடுறான். என்னய்யா இதெல்லாம்? இருவது பேரை கூட்டி வச்சுக்கிட்டு எவனாவது காதல் பண்ணுவானா?

ஹீரோயின்களைப் பத்தி பேச வேணாம். பாவம். ஏன், இங்க ரேவதி வரலை. அது அவர்கள் தவறு.

என்னை கூப்பிடும்போது, ‘அட்ரஸ் குடுங்க. இன்விடேஷன் தரணும்’னு சொன்னங்க. அதெல்லாம் வேணாம்பா. நானே வர்றேன். என்கிட்ட சில இன்விடேஷன் குடுங்க. நான் பாக்க்கிறவங்களுக்கெல்லாம் தர்றேன்னு சொன்னேன்.

நாங்க அழைக்காமலே வருவோம். சிலர் அழைத்தாலும் போகாத சினமும் உண்டு. பெண்களை யாரும் வரவேண்டாம்னு சொல்லலை. ஏன் சுகாசினி வரலை?

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ல நசிக்கும்போது,
‘இன்னா சார்! கேமராக்கு முன்னாடிலாம் நடிச்சதில்ல சார்.’
‘நடிம்மா’
‘இல்ல சார், போஸ்டரெல்லாம் ஒட்னா, மூத்திரம்லாம் பேய்வாங்களே சார்’

இன்னாடா இது? அசிங்கமா பேசுறாரேன்னு பாக்கலாம். இதைவிட அசிங்கமா பாத்துட்டீங்களே.

சென்சார்ல கோவனம் கீழ விழுதுபா. கோவனம் தாம்பா தமிழனோட அடையாளம். அது கீழ விழுது. அதை கட் பண்ணுன்றான்.
சரி, கட் பண்ணிட்டேன். லேடீஸ்லாம்கூட இருந்தாங்க.
‘இல்ல சார். அந்தக் கோமனம்...’
‘அட தொப்புள்லாம் பாத்துட்டீங்களேம்மா.’
‘த்தூ... காரி உமிழ்கிறேன்.’

அப்படீன்னு சொல்றார் லெனின். அந்த லெனின். நான் சொல்லலை.

‘டேய்! இப்ப அது இருக்காடா? மெதுவ்வாடா!’ இது அதைவிட அசிங்கமில்லையா?
முட்டாள்கள். இதையெல்லாம் அலோ பண்ணியிருக்காங்க.

டி.எம்.கே வந்தான், ஏ.டி.எம்.கே வந்தான், அப்புறம் சென்ட்ரல்ல இருந்து காங்கிரஸ் வந்தான். அவங்கள்லாம் தேவையில்ல. அப்பதான் நல்ல படம் வரும்.
அங்க உக்காந்து சொல்வானுங்க.
‘கட். மியூட்.’

வாட் யூ நோ அபவுட் த டெக்னிக்?

இதுல ரிவைசிங் கமிட்டின்னு ஒண்ணு வச்சிருக்கான். அதுலயும் நம்மாளுங்க சிலபேரை வச்சிருக்கான். அவங்களுக்கும் ஒண்ணும் தெரியாது. அட! நல்ல படம் வரணும்னா, கலைப்புலி தானு மாதிரியெல்லாம் இருக்கக்கூடாது.

எல்லா படங்களுக்கும் மானியம் குடுக்கனும்னு அவசியமில்ல. ஒரு பிரின்ட் எடுத்தா மானியம் இல்லன்றான். எட்டு பிரின்ட் இல்லைன்னா உள்ளே வராதன்னு சொல்றான். இதையெல்லாம் உடைங்க. இல்லைன்னா, எக்சிஸ்ட் த ரூல்.

எனவே, அரசாங்கம், இந்தக் கமிட்டி, இந்த கான்செப்ட், இந்த மானியம் போன்ற சமாச்சாங்களை உடைக்கணும். அப்போ, ஒரு பிரின்ட்டாவது எடுக்கிறவன் வருவான். அந்த ஒரு பிரின்ட்டுக்கு எட்டு லட்சத்தை வாங்கி, நாலஞ்சு பிரின்ட்டாவது போடுவான்.

இப்போ பிரின்ட்டே தேவையில்ல. எல்லாம் கியூப் சிஸ்டம். ஓரு இடத்திலேர்ந்து நாலஞ்சு தியேட்டருக்கு ஒளிபரப்பலாம். ஆனா, டிஸ்ட்ரிபூட்டருக்கோ, இவனுக்கோ ஒண்ணும் தெரில.

ஒரு படத்துக்கு நூத்தியம்பது காப்பி எடுத்தா, ஃபர்ஸ்ட்டு சீன்ல தேங்காயை உடைக்கிறான்.

‘எந்திரன்ன்’னு சொன்னங்களே! ‘ரன்ன்ன்’தான் அது.
எவ்ளோ வேஸ்டேஜ்?
அதுக்கு அப்புறம் வேஸ்ட் வாங்கறதுக்கு வருவான் ஒருத்தன். கோனிப்பைல வச்சி மிதிச்சி, ஃபிலிமை உள்ளே தள்ளுவான். தேங்கா உடைச்சதெல்லாம் அதுலதான் இருக்கும். இதுபோலதான் நிறைய படம் வருது.

எல்லாத்தையும் அமானுஷ்யமா நீங்க நினைக்கக்கூடாது. அதுக்காக சொன்னேன்.

‘நல்ல கதை இருந்தா குடுங்க’ன்னார் லிங்குசாமி. எவ்ளோ பேர் நல்ல கதை வச்சிட்டிருக்காங்கபா. ஏன், எஸ்.ராமகிருஷ்னன் இல்ல? நானும் படிச்சிருக்கேன். ஒரு டைரக்டருக்கு என்ன தெரியணுமோ, அதைவிட அந்த ஸ்கிரிப்ட்ல இருக்கு. ரைட்-அப்தான் முக்கியம்.

பாசமலரில் சிவாஜிகணேசனும் சாவித்ரியும், பீம்சிங்கும் இல்லையென்றாலும் அந்தப்படம் ஓடியிருக்கும்.
நான் சொல்லலை. பீம்சிங் சொன்னது.

எனவே, இதை நோக்கிப் போங்க. பேஸிக்கா நம்ம கல்சுரல்ஸ்! ஏன்னா, உலகப் படங்கள் என்னா சொல்லுதுன்னா, அவங்கவங்களோட கல்ச்சர்ஸ். என்னா கல்ச்சர்னெல்லாம் கேக்காதீங்க. நீங்க பாருங்க.’’

Thursday, January 20, 2011

‘‘என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாலும் கவலையில்லை.’’ -பாலுமகேந்திரா வருத்தம்!


*சென்னை சங்கமம் நடத்தியநாளைய சினிமாநிகழ்வின் இரண்டாம் பதிவு.

‘‘நேற்றைய சினிமாவோடு வளர்ந்தவன் நான். அதை ரசித்து, நெகிழ்ந்து, சிரித்து, அழுது, தூக்கங்கெட்டுப்போய் வாழ்ந்திருக்கிறேன். எனவே, அதைப்பற்றி பேசலைன்னா சரியாக இருக்காது. அந்த சினிமாவை, இன்று இருக்கக்கூடிய சினிமா வித்தகர்கள், ‘மேடை நாடகம்என்று ஒதுக்கலாம். ‘அதீதங்கள் அடங்கிய ஒன்றுஎன ஓரங்கட்டலாம். ‘அந்த சினிமாவில் வலிந்து, புனைந்து எழுதப்பட்ட, எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட கதைகள் இருக்கிறதென்றுநிராகரிக்கலாம். ‘அது சினிமாவே அல்ல என்றுகூட சொல்லலாம்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமா, ஒலிப்பதிவு செய்யப்பட்ட ரேடியோ நாடகங்களாகவே இருந்தது. திரைக்குள்ளே போகவேண்டியதில்லை. வெளியே நின்று வசனங்களைக் கேட்டாலே போதும். படம் பார்த்த மாதிரி பீற்றிக்கொள்ளலாம். அதை, நிறைய செஞ்சிருக்கேன் நான். படம் பார்க்காமல், டென்ட் கொட்டகைக்கு வெளியே நின்று, படம் பார்த்த மாதிரி சொல்லியிருக்கிறேன். என்னென்ன சினிமா என்று நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. இதையும் நீங்கள் அந்த சினிமாவின் குற்றச்சாட்டாக சொல்லலாம்.

அப்ப எடுத்தப் படங்களை மறக்க முடியுமா? பீம்சிங் சார். அவரோட ஒரேயொரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. i learned a lot, in that one film.

ஒரு விஷயத்தை நீங்கள் மறக்கக்கூடாது. அந்த சினிமாக்களில் எல்லாம் ஒரு அற்புதமான விஷயம் இருந்தது. அவைஆரோக்கியமான பொழுதுபோக்குப் படங்களாகஇருந்தது. அந்த ஆரோக்கியத்தை இன்று நான் இழந்துவிட்டோம்.

தெரிஞ்சோ, தெரியாமலோ, பிரக்ஞைபூர்வமாகவோ, இல்லையோ. அதை எங்கேயோ தொலைத்துவிட்டோம். அதன் பிறகு இன்றைய சினிமாக்கள் வந்தது. இதைப்பற்றி நான் பேசித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. so, am not going to speak anything about, today cinema.

நாளையை சினிமா பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரு படம் எடுத்து கான்பிக்கிறேன். அதைப் பாருங்கள். அந்த ஸ்கிரிப்ட் இப்போ முடிகிற தருவாயில் இருக்கு. ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங் தொடங்குமென்று நினைக்கிறேன். எனவே, பேசுவதில் பிரயோஜனமில்லை. do it.

இன்றைக்குப் பேசப்படும் பல விஷயங்கள் பற்றி, என்னுள்ளே ஏற்பட்ட தேடல் காரணமாக, ஒரு சில புரிதல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

இதற்கு முன்பு செய்யப்பட்டது என்கிற காரணத்தால், அதை நீங்கள் செய்யாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. அதை நிராகரிக்கவேண்டாம். you do it. அதே விஷயத்தை, நீ எப்படி செய்கிறாய் என்பதுதான் எனக்கு முக்கியம்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, வரையாத ஓவியர் யாராவது இருக்கிறார்களா? எனவே, ஆயிரம் தடவை செய்தாலும் சரி, அதை நீ எப்படி செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.

இரண்டவதாக, எந்த ஒரு படைப்பாளியும், இது முழுக்க முழுக்க எனக்குச் சொந்தமானது என்று சொல்ல முடியாது. இது என்னுடைய சமீபத்திய புரிதல். உள்ளது உள்ளபடி என்பது சினிமவில் கிடையாது. நான் பார்த்ததை, நான் விரும்பியபடி உனக்குக் காண்பிப்பதுதான். எனக்கு தெரிந்த விஷயத்தைத்தான் நான் காண்பிக்க முடியும். ஆனால், எனக்கே தெரியாத விஷயமிருக்கே! அதை யார் காண்பிப்பது?

ஒரிஜினல் படைப்பு என்று எதுவுமே கிடையாது. எனக்குள்ளே இருக்கிற சத்யஜித் ரேவை நான் என்ன பண்ணுவேன். என்னுள்ளே இருக்கிற அகிரகுரசேவாவை என்ன பண்ணுவேன்? என்னுடைய பாரதியை, கம்பனை நான் என்ன பண்ணுவேன்?

ஸோ, இதெல்லாம்... என்னுடைய ஜீன்ஸ். இவை எனக்குள்ளே இருக்கிறவரைக்கும் எனக்குத் தெரியாமலேயே அவை வந்துகொண்டிருக்கும். சில சமயம், தெரிந்து வெளிவரும். ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய பேரனைப் பார்த்து, என்னை மாதிரியே இருக்கிறான் என்று சொன்னால் நான் சந்தோஷப்படத்தானே வேண்டும்? தட் இஸ் மை ஜீன். அது குறித்து நான் எதற்கு வெட்கப்படவேண்டும்? எனவே, இன்றிருக்கும் இளைஞர்களுக்காகச் சொல்கிறேன். டோன்ட் வொர்ரி அபவுட், பீப்புள் டாக் டு திஸ் திங். அந்தச் சாயல் இருக்கு, இந்தச் சாயல் இருக்கு. அதைப்பற்றியெல்லாம் கவலையே படவேண்டாம்.

எந்த ஒரு விஷயத்தையும் இனிமே நீங்கள் புதுசாகச் சொல்ல முடியாது. பிகாஸ், எக்ஸ்போஷர் ஸோ மச். நீ எதைச் சொன்னாலும் அது எனக்கும் கொஞ்சம் தெரியும். முன்னாடி அப்படியில்லை. இப்போ அப்படி இருக்கு. ஸோ, நீ எதை சொல்றேங்கிறதை வைத்து நான் உன்னை மதிப்பிட மாட்டேன். நீ எப்படி சொல்லியிருக்கே. அதுதான் முக்கியம். போலீஸ் ஷ்டேஷனில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை வைத்து நீ கதை பண்ணலாம். அது போன வருஷம் தினத்தந்தியில் வந்த செய்தி. எனவே, தெரிந்த விஷயத்தை, சினிமாவாக நீ எப்படிப் பண்ணியிருக்கே. அதுதான் முக்கியம்.

மிஷ்கின் பேசும்போது சொன்னார். audience must be ready to accept, good film. ‘நல்ல படம், நல்ல படம்னு சொன்னால் என்ன? நல்ல சினிமா என்பது என்ன? திங்க், இதுக்கு... ஒரு டெஃபினிஷனும் கிடையாது. நல்ல சாப்பாடு என்பது என்ன? ஒரு ஐயரிடம் கேட்டால், ‘சாம்பாரும் புளியோதரையும்என்பார். என்கிட்ட கேட்டால், ‘நல்... ஒரு கோழிக்காலும், கருவாட்டுத் துண்டும்என்பேன். நல்ல சினிமாவும் இந்த மாதிரிதான். நல்ல சினிமா என்பது, ‘மக்களிடமிருந்து ரத்தமும் சதையுமாக பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு கதை’.

மக்களுக்காக, மக்களுடைய மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட ஒரு கதை. ஊடக ஆளுமையுள்ள ஒரு படைப்பாளியால், எந்தவித சமரசங்களுக்கும் உட்படுத்தப்படாமல், இன்க்ளூடிங் கமர்ஷியல் காம்ப்ரமைஸஸ். நேர்மையோடும், கண்ணியத்தோடும் பண்ணப்படும்பொழுது, அங்கொரு நல்ல சினிமா பிறப்பதற்கான சாத்தியம் உண்டு என்று சொல்வேன்.

இளைஞர்களுக்கு நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நீங்க நிறைய படிக்கணும். ஆனா, படிக்க மாட்டேங்கறீங்க. என்னுடைய திரைப்பட பள்ளிக்கூடத்தில், the first tamil film school in the world. அங்கே தமிழ்லதான் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன். எல்லோரும் தரைல உட்கார்ந்துதான் பாடம் படிக்கிறாங்க. நவீன தமிழிலக்கியம் அங்கே ஒரு கட்டாயப் பாடமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு சிறுகதையை நீ படிச்சே ஆகணும். படிச்சா மட்டும் போதாது. புத்தகத்தை மூடி வச்சிட்டு, அந்தக் கதையை உன்னுடைய மொழியில் சொல்லணும். இந்தப் பயிற்சி ஒவ்வொரு நாளும் நடக்கிறது. ஏன், இந்தப் பயிற்சி கொடுக்கிறேன்?

என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். ‘கதை நேரம் பண்றப்போ 52 கதைகளை எடுத்தீங்க சார். ஏன், புதுமைப்பித்தனை எடுக்கலை? அற்புதமான உன்னத படைப்புகள் இருக்கே. ஏன், இதையெல்லாம் நீங்க எடுக்கலை?’ன்னு கேக்கறாங்க. லாசரா. பிச்சைமூர்த்தி, செல்லப்பா, ஜெயகாந்தன், இவங்களையெல்லாம் ஏன் எடுக்கலைன்னு கேட்கிறார்கள்.

அவங்க மேல உள்ள மரியாதை காரணமா நான் எடுக்கலை. ஊடக மாற்றம் என்று வரும்போது ரொம்ப அநியாயமான ஒரு விஷயத்தை நான் செய்யவேண்டியிருக்கும்.

ஒரு சிறுகதையில் இருந்து நான் எதைக்கொண்டு போகலாம்? மாஸ்டர் பீஸ் என்று சொல்லப்படுகிற ஒரு கதையின் உள்ளடக்கமும், சொல்லப்பட்ட விதமும் சேர்ந்து, அற்புதமான ஒரு புணர்வு இருக்கும். அந்தப் புனர்வு காரணமாக அது உண்ணதமாக இருக்கும். அந்தப் படைப்பாளியினுடைய தமிழ் ஆளுமை, அவனுடைய பாண்டித்யம், சொற்தேர்வு, வாக்கிய லயம், கதை சொல்கிற லாவகம். இதையெல்லாம் நான் என்ன பண்ணுவேன் சினிமாவில்? குப்பைக் கூடையில்தான் போடணும். i dont want to do that.

மேட்டர் என்னய்யா? அதைத்தானே நான் கொண்டு போகணும். என்னுடைய மொழி சினிமா. அந்த மொழியில்தான் சொல்வேன். முடிந்தால் உன்னைவிட பெட்டராக. எனவே, இவர்களின் உன்னதங்களை தூர நின்று நான் கும்பிட்டதோடு சரி.

நல்ல சினிமா எடுத்தால், அதைப் பார்ப்பதற்கு ஆள் இருக்கனுமில்லையா? அப்படி இல்லையென்றால், நல்ல சினிமா எடுத்து என்ன பிரயோஜனம்? நல்ல சினிமாவைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு அவனுக்கு அறிவு இருக்கணுமில்லையா? இது எங்கிருந்து வரும்?

இளைஞர்கள் உலக சினிமாக்களை பார்க்கவேண்டும். உலக சினிமா இங்கே நிறைய கிடைக்கிறது. அது பைரஸியா இருந்தாலும் என்னவா இருந்தாலும் நான் வாங்குவேன். 20 ரூபாய்க்கு ஒரு உலகப்படம் கிடைக்குதுன்னா நான் வாங்குவேன். என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாலும் கவலையில்லை.’’

கனிமொழியம்மா வருவாங்கன்னு பார்த்தேன் வரவில்லை. ராஜாத்தியம்மா இருக்காங்களா இங்கே? கனிமொழியும் இல்லை, ராஜாத்தியம்மாவும் இல்லை. கலைஞருக்குப் போய்ச் சேரணும் ஒரு விஷம். யாராவது அவர் காதுல போட்டு வச்சா சந்தோஷப்படுவேன்.

89-ல் அவருடைய 75-வது பிறந்தநாள்னு நினைக்கிறேன். கலையுலகம் மிகப்பெரியதொரு விழா எடுத்தோம். அப்போது, ‘சினிமா ரசனை பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக வேண்டும். 11, 12-ம் வகுப்பில் வாரத்தில் ஒரு நாள் போதும். அப்படியொரு ஆடியன்ஸை நாம கிரியேட் பண்ணாத்தானே நல்ல சினிமா எடுக்க முடியும். ஆடியன்ஸே இல்லாம நல்ல சினிமா எடுத்து என்ன பண்றது? அந்த ஆடியன்ஸை பிரக்ஞைபூர்வமாக நாம் தயாரித்தாகணும். நல்லது எது, நஞ்சு எது என்று தெரியணும். அது பள்ளிக்கூடங்களில்தான் சாத்தியம்என்று கோரிக்கை வைத்தேன். வெங்கட்ராமன் பிரசிடென்ட்டாக இருந்தப்போ, டெல்லியில் ஒருதடவை கோரிக்கை வைத்தேன். ரெண்டு பேருமே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இதுவரை சினிமாவைப் பாடமாக்கவில்லை.’’