Monday, October 18, 2010

”பழி தீர்த்த சுந்தரம் மாஸ்டர், பயிற்சி கொடுத்த பிரகாஷ்ராஜ்” பாவம் ரமலத்


திருமணம் என்பது சொர்க்கத்தில் மட்டும் நிச்சயிக்கப்படுவதில்லை. திருமணப் பத்திரம், ரேஷன் கார்டு, குழந்தைப் பிறப்பு, பாஸ்போர்ட் என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியாமல் பிரபுதேவா மற்றும் நயன்தாராவிடம் இருந்து ரமலத்தைக் காப்பாற்றி வருவது மேற்கண்டப் பதிவுகள்தான்.

ரமலத்தின் வாழ்க்கை நிர்க்கதியாய்ப் போனதற்கு நயன்தாராதான் காரணம் என்று மீடியாக்கள் எழுதி வருகின்றன. ஆனால், உண்மை அதுவல்ல என்கிறது கோடம்பாக்கம். வீட்டில் ஒன்று வெளியில் ஒன்று என இரண்டு காரணிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

முதலாமவர், பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டர். ‘என்னிக்கா இந்தாலும் இந்தக் கல்யாணத்தைப் பிரிச்சுக் காட்றேன்’ என்று சுந்தரம் சவால் விட்டதாகவும், அதை நிறைவேற்றிக் காட்டியதாகவும் சொல்கிறார்கள். இரண்டாமவர், நடிகர் பிரகாஷ்ராஜாம். லலிதகுமாரியை உதறிவிட்டு போனிவர்மா என்கிற நடன இயக்குநரை கைப்பிடித்த இவர், தன்னுடைய யுத்திகள் முழுவைதையும் பிரபுதேவாவுக்குக் கற்றுக் கொடுத்தாராம்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

‘‘பதினைந்து வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய 23&ம் வயதில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ரமலத்தைக் கைப்பிடித்தார் பிரபுதேவா. இருவரும் அப்போது நடனக் கலைஞர்களாக இருந்தார்கள். இன்றைக்கு உள்ளதுபோல் பனமும் புகழும் பிரபுதேவாவுக்கு அப்போது இல்லை. வளர வேண்டிய வயதில் கல்யாணம் ஆகிவிட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அச்சப்பட்டார், அப்பா சுத்தரம். அவரது அச்சம் நியாயமானதுதான். ஆனால், அச்சத்தை உடைத்து அப்பாவின் கணிப்புக்கு எதிராக உச்சத்திற்கு வந்தார் பிரவுதேவா. ரமலத் இல்லையென்றால், இது சாத்தியமே இல்லை’’ என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

‘‘பொண்டாட்டி பிள்ளைங்க மேல ரொம்ப பாசமா இருப்பான் பிரபு. அடிக்கடி வெளிநாடு அழைச்சிட்டுப் போவான். மூணு குழந்தைங்க பெத்திருக்கான்னா, ரமலத் மேல அவனுக்கு எவ்ளோ காதல் இருந்திருக்கும்ங்கிறதை சொல்லத் தேவையில்லை. ரமலத் இல்லாம தன்னால வாழ முடியாதுன்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணான். அந்தப் பொண்ணும் புருஷன் வீட்ல தனக்கு ஆதரவு இல்லைன்னு தெரிஞ்சு, பொறுப்போட நடந்துக்கிட்டா. அதிர்ந்து பேசமாட்டா. வீட்டுக்கு யார் வந்தாலும் ரொம்ப கணிவா நடந்துப்பா. இன்னிக்கு பிரபு இந்தளவு வளர்ந்திருக்கானா, அதுல ரமலத்துக்கு முக்கியப் பங்குண்டு.’’ என்கிறார் பிரபுதேவா&ரமலத் திருமணத்தை முன்னின்று நடத்தியவரான ஜெயந்தி கண்ணப்பன். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களெல்லாம் தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் இவர்.

‘‘பழைய பகையை மனசுல வச்சு சுந்தரம் மாஸ்டர் பழி வாங்கிவிட்டதாக சிலர் சொல்றாங்க. நான் அப்படி நினைக்கலை. பிரபுவும் அவனோட குழந்தைகளும் மாஸ்டர் வீட்டுக்கு போய் வந்துட்டுதான் இருக்காங்க. அவரும், பேரப் பிள்ளைங்க மேல ரொம்பப் பாசமா இருக்கார். என்னைப் பொறுத்தவரை நயன்தாராதான் இதுக்கு முக்கியக் காரணம். அவளுக்கு இப்போ 23 வயசுதான். ஆனா, காசு இருக்கிற தைரியத்துல ஆட்டம் போடுறா. மூணு கோடி ரூபாய்ல ஒரு வீடு. மாசம் மூணு லட்ச ரூபா பணம். 85 சவரன் நகையெல்லாம் ரமலத்துக்கு கொடுத்திருக்கிறதா இன்டஸ்ட்ரி முழுக்க புரளி கிளப்பியிருக்கா. இதுல துளிகூட உண்மையில்லை. காசு பனத்துக்கு ஆசைப்படுறவ இல்லை ரமலத். நயன்தாரா எப்படிப்பட்டவ, யாரோடவெல்லாம் சுத்திட்டு வந்திருக்காங்கிறதை பிரபு யோசிச்சுப் பாக்கணும். ஆனா, யோசிக்கிற மனநிலையில் அவன் இல்லை. அதுதான் வருத்தமான விஷயம்’’ என்கிறார் ஜெயந்தி.

ஆனால், ‘‘சுந்தரம் மாஸ்டரின் சூழ்ச்சிதான் பிரிவுக்கு முக்கியக் காரணம்’’ என்கிறது ரமலத்தின் உறவினர் வட்டாரம்.

‘‘பிரபுதேவாவையும் குழந்தைங்களையும் ஏத்துக்கிட்ட மாஸ்டர் குடும்பம், ரமலத்தை மட்டும் கடைசிவரை ஏத்துக்கலை. மாமனார் வீட்டில் ஒருநாள்கூட ரமலத் கால் வச்சதில்லை. கல்யாணத்துக்குப் பிறகு வெளியுலகமே தெரியாத அவங்களுக்கு பிரபுவைத் தவிர யாரையுமே தெரியாது. இதுதான் அவங்களோட இன்றைய நிலமைக்குக் காரணம். பிரபுவோட அந்தஸ்துக்கு, ரமலத் லாயக்கு இல்லைன்னு மாஸ்டர் குடும்பம் நினைக்குது. இப்போகூட சுந்தரம் மாஸ்டர் வீட்டில் வச்சு, பிரபுதேவா&நயந்தாராவுக்காக விஷேஷ பூஜை நடந்திருக்கு. ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க கவனிக்கணும். காதல் திருமணத்தை எதிர்க்கிறவர் இல்லை சுந்தரம் மாஸ்டர். ராஜூ சுந்தரமும் கமலஹாசனோட கடைசியா சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகையும் சின்சியரா லவ் பண்ணாங்க. மாஸ்டர் வீட்டுக்கு வருவாங்க. கூத்தடிப்பாங்க. ஆனா, அதையெல்லாம் மாஸ்டர் கண்டிக்கவே இல்லை.

அது மட்டுமில்லை. மூத்த பையன் கேன்சர்ல செத்த மறு நாளே, பிரபுவைக் கூட்டிட்டு நயன்தாரா வெளியே போய்ட்டாங்க. இரக்கமே இல்லாத இந்த விஷயத்தைக்கூட மாஸ்டர் கண்டிக்கலை. காரணம், எப்படியாவது ரமலத்தைவிட்டு பிரபு வெளியே வரட்டும்னு அவர் நினைச்சதுதான். அதுக்காகத்தான் நயன்தாராவுக்கு அவர் சப்போர்ட் பண்ணுகிறார்’’ என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்.

‘‘அடக் கடவுளே!’’ என்று வியக்கும் வேளையில், ‘‘பொண்டாட்டியை கட் செய்வது எப்படி என்று பிரபுதேவாவுக்கு பயிற்சி கொடுப்பது பிரகாஷ்ராஜ்தான்’’ என்று இன்னொரு குண்டையும் போட்டார்கள்.

‘‘பிரகாஷ்ராஜ்&பிரபுதேவா. லலிதகுமாரி-ரமலத்(எ)லலிதா. ‘பேர் ஒத்துமையைப் பாருங்க. பிரகாஷ்ராஜோட மனைவிக்கு எந்த மாதிரி சிக்கலெல்லாம் வந்ததோ, அதே மாதிரி சிக்கல்தான் ரமலத்துக்கும் வருது. முன்னாடிலாம் 3 லட்சம் 4 லட்சம்னு வீட்டுச் செலவுக்கான பணத்தை ரமலத்தே மேனேஜ் பண்ணுவார். வீட்லயும் காசு இருக்கும். ஆனா, இப்போ காசு கொடுக்கிறதை பிரபுதேவா நிறுத்திட்டார். ‘மளிகை பில்லை கொடு. நான் செட்டில் பண்ணிக்கிறேன்’னு சொல்லியிருக்கார். உதவி கேட்டு யாரையும் பார்க்கக்கூடாதுன்னு வீட்ல இருந்த காரையும் எடுக்கப் பார்த்தார். நாங்கதான் அதைத் தடுத்து நிறுத்தினோம். இனி அன்றாடத் தேவைகளை ஒரேயடியாக நிறுத்தி ரமலத்தைப் பணிய வைக்க முயற்சி நடக்குது. பாவம் ரமலத். வேறு வழியில்லாம கோர்ட் படி ஏற வேண்டியதாப் போச்சு’’ என்கிறார்கள்.

ரமலத்திடம் இது குறித்துக் கேட்டபோது, ''எனக்கு எதிராக சதி நடப்பது உண்மைதான். தொடர்ந்து மிரட்டல்கள் வேறு வந்துகொண்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இப்போதைக்கு என்னால் பேச முடியவில்லை.’’ என்று முடித்துக்கொண்டார்.

பிரகாஷ்ராஜ் தரப்பில் இது குறித்து கேட்க முயற்சித்தபோது போனையே எடுக்கவில்லை. மாஸ்டர் வீட்டிலிருந்தும் முறையான பதில் இல்லை.