Thursday, May 26, 2011

3-ம் தேதி முதல் ‘அ’வுக்கும் ‘இ’வுக்கும் மு.க. போடுகிறார் முழுக்கு!


தனது பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி முதல் அரசியலுக்கும் அதனோடு சேர்த்து இலக்கியத்துக்கும் முழுக்குப் போடுகிறார் மு.கருணாநிதி. இதற்கான அறிவிப்பும் 3-ம் தேதியன்றே வெளியாகவிருக்கிறது.

“தலைவா! இலக்கியப் பணியை மட்டும் தயவு செய்து விட்டுவிடவேண்டாம்” என்று தொண்டர்கள் யாராவது உண்ணாவிரதம் இருந்தாலோ, தீக்குளிக்க முயன்றாலோ, இலக்கியத்தை மட்டும் தொடர்வது என முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கட்சியையும், கனிமொழியையும் காப்பாற்றும் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியிலிருக்கும் ஐந்து ஆண்டு காலமும் அழகிரியை அடக்கி வாசிக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வை.கோ.வை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக தெரிகிறது.

மாறன் குரூப் குறித்த தகவல்கள் ஏதும் தற்போதைக்கு இல்லை.