Thursday, January 26, 2012

பாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்" -இயக்குநர் மு.களஞ்சியம்!

2012, ஜனவரி 22-ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலரும், காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவருமான கே.எஸ்.கோவிந்தராஜன் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா,

"நான் தீவிரமான காங்கிரஸ்காரன். சோனியாகாந்தி படம் பொறித்த அழைப்பிதழில், எனது படமும் இருப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மொழி, இனம் அழிந்துபோக நாம் அனுமதிக்கக்கூடாது. அது, தாயைத் தொலைப்பதற்குச் சமம். எனவே, மக்களுக்கும் மொழிக்கும் ஏதாவது ஆபத்து எனில், காங்கிரஸ் தலைவராகிய நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்." என்று பேசியிருக்கிறார்.

ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற முறையிலும், தமிழன் என்கிற முறையிலும் பாரதிராஜாவின் பேச்சு குறித்து, தன்னுடைய கருத்தை பதிவு செய்கிறார்யையக்குநர் மு.களஞ்சியம்.

இதேபோல், தமிழ் திரைப்பட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்தில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்ளையக்குநர் சேரன்.

இது குறுத்து பேசியுள்ள களஞ்சியம், "வெறும் 25 லட்சம் வாங்கிக்கொண்டிருந்த நடிகனுடைய சம்பளம், கடந்த மூன்றாண்டுகளில் 5 கோடியாக உயர்ந்திருக்கிறது. 50 லட்சம் வாங்கிக்கொண்டிருந்தவனின் சம்பளம் 10 கோடியாக உயர்ந்திருக்கிறது. இயக்குநர்களின் சம்பளமும், இசையமைப்பாளர்களின் சம்பளமும் பல கோடிகளுக்கு உயர்ந்திருக்கிறது.
ஆனால், தொழிலாளிக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதிமுறையின் அடிப்படையில்தான் ஊதியம் என்றால், என்ன நியாயம்? மூன்று வருடத்திற்கு ஒருமுறை என்கிற சம்பள உயர்வை நீங்கள் நடைமுறைபடுத்தியிருந்தால், அவன் ஏன் போராட்டத்தில் இறங்கப்போகிறான்?" என்கிறார்.

Friday, January 6, 2012

உடல் உறுப்பு தானமும் மருத்துவர்களின் மனிதாபிமானமும்

தூத்துக்குடி சேதுலட்சுமி படுகொலை மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது அரசு மருத்துவர்கள் காட்டும் அயோக்கியத்தனம் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரை பதியப்படுகிறது. 


****************************************************************

“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

டாக்டர் தம்பதியான அசோகன்-புஷ்பாஞ்சலியின் ஒரே மகன் ஹிதேந்திரன் மரணம்தான் இத்தகைய தானத்துக்கெல்லாம் மூலகாரணம். ஹிதேந்திரன் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விஷயம், மீடியாக்கள் மூலம் பரவி, மிகப்பெரிய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

2010, ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி, 86 பேரிடமிருந்து 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்திருப்பதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம், உரிய நேரத்தில் உறுப்புகளைப் பயன்படுத்த முடியாமல் சட்ட நடவடிக்கைகள் தடுப்பதாக அரசுக்குப் புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, கடுமையாக இருந்த பழைய விதிமுறைகளைத் தளர்த்தி உத்தரவிட்டது தமிழக அரசு.

வெளிப் பார்வைக்கு இது உயிர் காக்கும் விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் ஈவிரக்கமற்ற கொலை வியாபாரம் ஒளிந்திருப்பதாக சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
‘‘இங்கு மூளைச் சாவு என்பது லாபகரமான ஒரு தொழில்’’ என்கிறார்கள் இம்மருத்துவர்கள்.

‘‘மூளை என்பது சிறுமூளை, பெருமூளை என இரண்டு வகையாக செயல்படுகிறது. இரண்டுமே செயலிழந்தால்தான் அது மூளைச் சாவு. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, சிறுமூளை அல்லது மூளைத் தண்டு செயலிழந்தாலே போதும். சட்டப்படி அதை மூளைச்சாவு என்று அறிவிக்கிறார்கள்.

சிக்கல் என்னவென்றால், சிறுமூளை இறந்த பிறகும் பெருமூளை வேலை செய்யும் என்பதுதான். அப்படிப் பெருமூளை வேலை செய்தால், சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கிறார் என்றே அர்த்தம்.

உதாரணமாக, ஒரு கர்ப்பிணிக்கு பெருமூளை மட்டும் செயல்படுவதாக வைத்துக்கொள்வோம். அவரால் இயற்கையாக குழந்தை பெற முடியும், பால் கொடுக்கவும் முடியும். ஆண் என்றால், விந்தணுக்களை எடுத்து டெஸ்ட் டியூப் பேபி உருவாக்க முடியும். அடுத்த சந்ததியே இந்த நபரால்தான் என்கிற சூழ்நிலையில், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் இல்லையா?

எனவே, “சிறுமூளை செயலிழந்ததாகக் கூறி சாவு என அறிவிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது மட்டுமல்ல.  சட்ட விரோதமானதும்கூட’’ என்று எச்சரிக்கிறார் பிரபலமான ஒரு நரம்பியல் நிபுணர்.

‘‘நரம்பியல் சட்ட விதிமுறைகளின்படி, பெருமூளை செயலிழந்துவிட்டதை நியூக்ளியர் ஸ்கேன் செய்துதான் உறுதிப்படுத்த முடியும். ஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் இதில் ஹைதர் அலி காலத்து நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஜப்பானில், மூளைச் சாவு சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது 100 நபர்களை நியூக்ளியர் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, 22 பேர் அதில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற சோதனைகள் இந்தியாவில் செய்யப்படுவதில்லை. எனவேதான், மூளைச் சாவு சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தைப் போக்க முடியும்” என்கிறார் அவர்.

சரி, “தானம், தானம்” என்கிறார்களே மருத்துவர்கள். உண்மையில் அது தானம்தானா?

‘‘இல்லை. தானம் என்கிற பெயரில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனித உறுப்புகள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்.  

‘கெடாவர்’ என்கிற மனித கசாப்பு கடை:

அது என்ன கெடாவர் கசாப்பு கடை?

மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை ‘கெடாவர்’ என்று அழைக்கிறது மருத்துவ உலகம். இந்தக் கெடாவர் பிசினஸ்தான் தற்போதைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஹாட்டஸ்ட் பிசினஸ்.

பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தேவைப்படுகிறவர்களுக்கு என தனியாகவே கெடாவர் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர் வைத்திருக்கிறார்கள். உறுப்பு தேவைப்படுபவர்கள் இந்த கவுண்ட்டர்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்காக, ஒருவர் ஒரு லட்சமோ அல்லது பத்து லட்சமோ டெபாசிட் செய்யவேண்டும். அதே சமயம், டெபாசிட் செய்துவிட்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை கெடாவருக்காக இவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.  இன்று சராசரியாக ஒவ்வொரு கார்ப்பரேட் மருத்துவமனையிலும் தலா ஒரு உறுப்புக்கு 50 முதல் 80 பேர்வரை முன்பதிவு செய்திருப்பதாகக் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.இதிலும்கூட, வசதியான நபர் என்றால், ஒரே ஆள் பத்துப் பதினைந்து மருத்துவமனைகளில் டெபாசிட் செய்திருப்பாராம்.

இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் நோயாளிகள் திரும்பப் பெற முடியும். என்றாலும், முக்கால்வாசிப்பேர் திருப்பி வாங்குவது இல்லை. காரணம், கேட்ட உறுப்பு கிடைக்கவேண்டிய நாளில், ‘லம்ப்பாக இருபது லட்சம்’ கொடுத்து பெரும் பணக்காரர்கள் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவதே. எனவே, டெபாசிட் செய்தவர் மீண்டும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பார்.

இப்படியாக, டெபாசிட் தொகையாகவே நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் தனியார் மருத்துவமனை கணக்குகளில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பதுதான்.

எந்த முதலீடும் இல்லாமல், நோயாளியின் தலையில் மிளகாய் அரைத்து, மாதம் ஒன்றுக்கு வட்டியாகவே பல லட்சங்கள் வருமானம் பார்க்கிற பிஸினஸ். மருத்துவம் படித்த மூளை என்னமாக சார்டட் அக்கவுண்ட் செய்கிறது பார்த்தீர்களா?

ஒரு மருத்துவமனை ஊழியர் இப்படிச் சொன்னார்: ‘‘சில சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களைப் பற்றிப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். வெளிநாட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை, இதய அறுவை செய்ததை சாதனையாக காட்டியிருப்பார்கள். ஆனால், நம் நாட்டில் தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்பை, வெளிநாட்டினருக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? என்று ஒரு நாயும் கேள்வி எழுப்புவதில்லையே! ஏன் சார்?

இங்கே நம்முடைய மக்களிடமிருந்து மூளைச்சாவு என்கிற பெயரில் இலவசமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளை, வெளிநாட்டுகாரன்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை விற்கிறானுங்க சார் அயோக்கியப் பயலுவ.’’

மனித உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம் என்று இருக்கும்போது, வெளிநாட்டினருக்கு எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

‘‘இங்கே உறுப்புகளைப் பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்றால், அதை வெளிநாட்டினருக்குப் பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன. எனவே, கருணை அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது’’ என்கிறார் கார்ப்பரேட் மருத்துவமனையில் புரியும் ஒரு மருத்துவர்.

நல்ல கருணையாக இருக்கிறதே! உள்நாட்டில் அவனவன் லட்சக்கணக்கில் கெடாவருக்காக டெபாசிட் செய்துவிட்டு, வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பானாம். அரசாங்கம் என்னடாவென்றால், அந்நியர்களுக்கு கருணை காட்டுவானாம்!

இதற்குத் தீர்வே இல்லையா?

‘‘இரண்டு விஷயங்கள்.

ஒன்று, கெடாவர் என்பது மருத்துவமனைகளையும் தாண்டி மாஃபியாக்களின் கையில் உள்ளது. மருத்துவச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் இந்த மாஃபியாக்களை ஒழிப்பது கடினம். ஒரு லட்சத்தில் முடிக்க வேண்டிய ஆபரேஷன்களை இன்றைக்கு 20 லட்சமாக்கியதும் இந்த மாஃபியா கும்பல்தான்.

இன்னொன்று நோய்க்கான காரணம். என்டோசல்ஃபான் மாதிரியான தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக இந்தியாவில் புழங்குகின்றன. உள்நாட்டில் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் உள்ளிட்ட பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு இந்த மருந்துகள்தான் காரணம். இத்தகைய மருந்துகளின் பின்னணியில் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சக்திகள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் கூட்டாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, அரசு இதற்கென ஒரு நிபுணர் குழுவை நியமித்தோ அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைத்தோ ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விடிவே இல்லை.’’  இதை நான் சொல்லவில்லை. கார்ப்பரேட்டில் பணிபுரியும் மனைதநேமுள்ள ஒரு மருத்துவர் சொல்கிறார்.

****************************************************************************

கெடவர் கொள்ளைக்காரர்களின் கொடூர முகத்தை தோலுரித்த மருத்துவ உலகம்:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது தந்தைக்கு கல்லீரல் பிரச்னை. மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டும். இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கிறார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில்(இந்த மருத்துவமனை இப்போது சென்னைக்கும் வந்து வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது), இதுபோன்ற ஆபரேஷன்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து குளோபல் மருத்துவமனையில் தன் தந்தையை அட்மிட் செய்கிறார் ஸ்ரீனிவாசன். பரிசோதனைகளுக்கு மட்டும் 95 ஆயிரம் ரூபாய் பில் கட்டுகிறார். அப்போது, லலிதா ரகுராம் என்கிற ‘கெடாவர் கோ-ஆர்டினேட்டர்’ ஸ்ரீனிவாசனைச் சந்திக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்த மோகன் பவுண்டேஷன் எனப்படும் என்.ஜி.ஓ ஊழியர். சென்னையில் ஒரு கெடாவர் இருப்பதாகவும், பத்து லட்சம் கட்டினால் அதை வாங்கித் தருவதாகவும் ஸ்ரீனிவாசனிடம் கூறுகிறார்.

இதை நம்பி, நகையை விற்று, கடனும் வாங்கி அப்பாவுக்காகப் பணத்தைக் கட்டுகிறார் ஸ்ரீனிவாசன்.

சில நாட்கள் கழித்து, கெடாவர் ரெடியாகிவிட்டதாகவும், அதைத் தனி விமானத்தில்(எவ்ளோ பெரிய பிசினஸ் பார்த்தீர்களா?) கொண்டுவர ஏழு லட்ச ரூபாய் கட்டும்படியும் கேட்கிறார் லலிதா. ஆனால், ஸ்ரீனிவாசனால் கட்ட முடியவில்லை. ஆனால், அப்பாவின் நிலைமை சீரியசாகிவிட, உடனடியாக மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.

அப்போதுதான், ‘‘கவலையை விடுங்க. உங்க அம்மாவோட கல்லீரலை எடுத்து உங்க அப்பாவுக்குப் பொருத்திடலாம். இதுபோல நாங்க 55 ஆபரேஷன்களை வெற்றிகரமா செஞ்சிருக்கோம். ஆபரேஷன் செலவுகளை மட்டும் கட்டினால் போதும்’’ என்று மருத்துவமனையில் உறுதி கொடுக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறது.

ஆனால், அடுத்து நடந்ததுதான் ஒண்ணாம் நெம்பர் ‘மனிதாபிமானம்’.

ஸ்ரீனிவாசனின் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோகும் வழியில், (சமயம் பார்த்து) 23 லட்சம் கட்டச் சொல்லியிருக்கிறது ஹாஸ்பிட்டல் நிர்வாகம். இரண்டு பேரின் உயிர் என்பதால், அதையும் கட்டியிருக்கிறார் ஸ்ரீனிவாசன். வழக்கம்போல், ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ எனக்கூறி வெளியே வந்திருக்கிறார் மருத்துவர்.

ஆனால், அடுத்த பதினைந்து நாளில் ஸ்ரீனிவாசனின் அப்பாவுக்கு உயிர் பிரிந்துவிட்டது. கல்லீரல் தானம் கொடுத்த அம்மா கோமாவுக்குப் போய்விட்டார். தொடர்ந்து 20 மாதங்கள்வரை கோமாவிலேயே இருந்திருக்கிறார் அந்த அம்மா.

முடிவில், 20 மாதங்கள் கோமா பேஷண்ட்டைப் பராமரித்ததாகக் கூறி இரண்டாம் கட்டமாக எக்ஸ்ட்ரா 45 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் அதையும் கட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவது ஆண்டில் அந்த அம்மாவும் இறந்து போய்விட்டார்.

கெடாவர் பிசினஸ் என்றால் என்ன, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? என்று இப்போது புரிகிறதா? இதுதான் உடல் உறுப்பு தானமும் மருத்துவமனைகளின் ‘மனிதாபிமானமும்’.

ஆதாரம்: http://www.issuesinmedicalethics.org/133cv01.html  

Friday, October 28, 2011

ஏன் எதிர்க்கவேண்டும் ‘ஏழாம் அறிவை’?

 ‘‘இந்த நாடு நாசமாகப் போயிருப்பதற்கு மூன்று காரணங்களை படத்தில் சொல்கிறார் கதாநாயகி ஸ்ருதிஹாசன். அவை "Reservation, Recommendation and Corruption". அய்யா பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை, நாடு நாசமாகப் போனதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்லும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது முருகதாஸ் அவர்களுக்கு!’’ -எழில் அரசன்.

-இதை மனதில் வைத்துக்கொண்டு வாசிப்புக்கு வாருங்கள்.
 "ஏ.ஆர்.முருகதாஸின் ‘எச்சில் அறிவு’" -இக்கட்டுரைக்கு முதலில் நான் வைத்த தலைப்பு இதுதான்.

“என்னடா இது, எட்டாவது அறிவுகூட கேள்விப்பட்டிருக்கோம். இவன், ‘எச்சில் அறிவு’ன்னு புதுசா ஒண்ணை சொல்றானே?”ன்னு யோசிக்காதீங்க.

‘‘இந்தப் படத்தைப் பார்த்தா, உங்க மயிரெல்லாம் நட்டுக்கும்’’னு சொல்கிறாரே முருகதாஸ்!

மயிர் நட்டுக்கொள்கிற அளவுக்கு அவரிடம், ‘கெத்து’(வீரம்) இருக்கவேண்டாமா?

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம், உன்போல் இரந்துண்டு வாழமாட்டோம்’’ என்று சிவனுக்கே சவால்விட்டுப் பேசுகிறாரே நக்கீரர். அப்படிப்படிப்பட்ட நக்கீரர் பரம்பரையில் வந்தவர் அல்லவா நீவீர். அந்த வீரம், தில்லு, உங்களுக்கு இருக்கணுமா வேண்டாமா?

(பட், ‘சங்கறுக்கிறது’ன்னா வேண்டாதவன் கழுத்தை அறுக்கிறது இல்லைங்க. அதைச் சிலபேர், ‘வலம்புரிச் சங்கு’ன்றான், சிலபேர் ‘ஆவுரிச் சங்கு’ன்றான். அது வேற கதை.)

நாம விஷயத்துக்கு வருவோம். ‘ஏன் நான் எச்சில் அறிவு’ங்கிறேன்?

தமிழன்னா, வீரம் வேணும்ல? கண்ட இடத்துல கையேந்தி பிச்சை எடுக்கக் கூடாதுல்ல?

ஓ.கே. உன்னால முடியல. மீறி, பிச்சை எடுத்துட்டீங்க. கம்முனு, ஃபிரன்ட்டையும் பேக்கையும் பொத்திட்டு ஓரமா போய் குந்திக்கணும்.

வாய் கிழிய உதார் விடக்கூடாது.

உனக்கு மட்டுமா இங்கே ஏழாம் அறிவு இருக்கு? எங்களுக்கும்தான் இருக்கு. நாங்களும்தானே நக்கீரர் பரம்பரை.

ஏற்கெனவே, ‘தமிழ் உணர்வைக் காசாக்குகிறதா ‘ஏழாம் அறிவு’ன்னு ஒரு பதிவு போட்டேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருக்கலாம்.

‘‘இவங்க எப்பவுமே இப்படித்தாம்பா. ‘வினவு’ மாதிரி எல்லாத்துக்கும் குத்தம் சொல்வாங்க’’ன்னு நினைக்கலாம். அப்படி நெனச்சா அது தப்புங்க.

‘இல்லாத அறிவை’ எடுக்க, எங்கெங்கே கைநீட்டி, எச்சிலையை வாங்கினார் அய்யா முருகதாஸ்’னு ஒரு பட்டியல் போடுறேன். பாத்துக்கங்க:

1. பாம்பே சர்கஸ்
2. KFC
3. Indian oil extra premium
4. Barath petroleum
5. Durable Chrome Factory
6. Vodafone
7. Aircel
8. State bank of India
9. NAC Jewellers
10.Landmark
11.Fast track
12.Nilgiris
13.Lions Club
14.7g systems
15.Sea land cargo
16.Natural spa

-இவ்ளோதான், என் கண்ணுல பட்டது.

“இது என்னடா, புதுக் கதையா இருக்கு. இதுக்கும் எச்சிலைக்கும் என்ன சம்பந்தம்?”னு மீண்டும், மீண்டும் யோசிக்கிறீங்களா? நல்லா யோசியுங்க.

லிஸ்ட்ல போட்ட கம்பெனி மட்டுமில்லைங்க, ஒரு திரைப்படம் என்கிற வகையில், இயக்குநரின் அனுமதி இல்லாமல், சின்னதொரு ‘சுண்டெலி மயிரைக்கூட’ நீங்கள் திரையில் காட்ட முடியாது.

தயாரிப்பாளரோ, நடிகரோ அதில் தலையிட முடியாது. படத்துக்கான ஒப்பந்தம் போடும்போதே, இது குறித்து தெளிவாக விளக்கிவிட்டேதான் கையெழுத்திடுகிறார்கள். ‘இப்படி கையெழுத்திடக்கூடிய, நக்கீரரின் உண்மையான வாரிசுகளும் இங்கே இயக்குநர்களாக இருக்கிறார்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது. இது சினிமா உலக நண்பர்களுக்கு தெரியும்.

எனவே, ‘‘சுண்டெலி மயிரைக்கூட காட்ட முடியாது என்கிற நிலைமை இருக்க, இத்தனை கம்பெனிகள் திரைக்குள் நுழைந்தது எப்படி?’’

அத்தனையும் காசு ஸார், காசு.

டி.வி.ல விளம்பரம் காட்டினா, எப்படி செகன்டுக்கு செகன்டு ரேட்டு வசூலிக்கிறாங்களோ, அப்படித்தான் சினிமாவிலேயும். காட்சிக்கு நடுவே தனியார் நிறுவன விளம்பரங்கள் வந்தால், ஒவ்வொரு செகன்டும் லட்ச லட்சமாய் கொட்டும். அதைத்தான், அய்யா ஏயாரு முருகதாஸும் செஞ்சிருக்கார்.

இன்னும், சுடர்மணி ஜட்டி விளம்பரம் தவிர, மற்ற எல்லா விளம்பரங்களிலும் அவுத்துப்போட்டு ஆடி, அதற்கெனவே உள்ள ஆர்டிஸ்ட்டுகளின் வயிற்றில் அடித்த(இது மறைமுக அடிங்க) ‘ஆறு பட்டெக்ஸ்’(but, இங்குள்ள பட்டெக்ஸை, 'வேட்டை நாய் தொகுதி' என்கிறது லிஃப்கோ) தம்பிக்கு இது நன்றாகவே தெரியும்.

but, ஒன் திங். six pack is not a decision authority. இட்ஸ் ஒன்லி a நாடி நரம்பெல்லாம் முருக்கினதாஸ் கம்பெனி முடிவு.

ஆனால், இதைக்கூட தப்பிலைன்னு நீங்க வாதிடலாம்.

‘‘ஒண்பது பேர் சேர்ந்து அடிக்கிறதுக்கு பேர் வீரம் இல்லை, துரோகம்.(இந்த துரோகத்துல ஒண்ணு, உங்க ‘மம்மி கன்ட்ரி’யும்தானே மிஸ்டர் முருகதாஸ்? அதை எதிர்த்து ஏன் பேசவில்லை? செலக்ட்டிவ் அம்னீசியாவா?)

தமிழனா இருந்தா, திருப்பியடிக்கணும்’’ என்கிற வசனம் இருந்ததால், இல்லாத அறிவை திரையிட முடியாது என்று திருப்பி அனுப்பியதே இலங்கை அரசு.

வீரனா இருந்திருந்தால் என்ன பண்ணியிருக்கணும்?

‘ஒன்ஸ் மோர் ஓல்டு டயலாக்கு.’

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம். உன்போல் இரந்துண்டு(இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடம்) வாழமாட்டோம்’’ என்று சொல்லிட்டு வீரனாக அல்லவா திரும்பியிருக்கணும். இங்குள்ள தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களும் சுருதி மூலமாக தமிழ்ச் சுருதியேற்றும் நீங்கள், ராஜபட்சே முன் வாலைச் சுருட்டி back-ல் வைத்துக்கொண்டது ஏன்?

‘‘நக்கிவிட்டீர்களே அய்யா ராஜபட்சே காலை. நீக்கிவிட்டீர்களே அய்யா வீரஞ்செறிந்த ரோலை’’

நீங்களே நீக்கிட்டதால, ‘‘அடச்சீ, இது வெறும் குத்தாட்டப் படம்தானே’’ என்று ராஜபட்சேவும் விட்டுவிட்டானே அய்யா தியேட்டருக்குள்ளே... கடைசியில் என்ன ஆச்சு?

“வெட்டி வேலாயுதம், இல்லாத அறிவு’ ரெண்டு படத்துக்கும், பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.” -newyarl.com

இப்போது ராஜபட்சேவுக்கு மிகுந்த சந்தோஷம். “எங்க இந்த நாய்ங்களெல்லாம், ‘சுதந்திரம், போர்க்குற்றம், ஐ.நா.சபை., சேனல் -4’னு நமக்கெதிரா செயல்படப்போகுதோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நண்பர் முருகதாஸ் புண்ணியத்துல, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க, விசய்க்கும், சூர்யா’வுக்கும் சொம்பு தூக்கிட்டு சந்தோசமா இருக்கோம்’னு சொல்லாம சொல்லிட்டானுங்க. இனி, ஐ.நா சபையே ஆய்வுக்கு வந்தாலும் கவலையில்லை”ன்னு பாக்கிற இடமெல்லாம் சொல்லிக்கிட்டு திரியிறாராமே...

எனவே, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேராபத்தையும் மறந்து, சுருதி மூலமாக தமிழுணர்வை சுருதியேற்றிக்கொண்ட தமிழர்களே! இப்போது புரிகிறதா, “ஏன் எதிர்க்கவேண்டும் ‘இல்லாத அறிவை’?” என்பது!