Thursday, January 26, 2012

பாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்" -இயக்குநர் மு.களஞ்சியம்!

2012, ஜனவரி 22-ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலரும், காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவருமான கே.எஸ்.கோவிந்தராஜன் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா,

"நான் தீவிரமான காங்கிரஸ்காரன். சோனியாகாந்தி படம் பொறித்த அழைப்பிதழில், எனது படமும் இருப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மொழி, இனம் அழிந்துபோக நாம் அனுமதிக்கக்கூடாது. அது, தாயைத் தொலைப்பதற்குச் சமம். எனவே, மக்களுக்கும் மொழிக்கும் ஏதாவது ஆபத்து எனில், காங்கிரஸ் தலைவராகிய நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்." என்று பேசியிருக்கிறார்.

ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற முறையிலும், தமிழன் என்கிற முறையிலும் பாரதிராஜாவின் பேச்சு குறித்து, தன்னுடைய கருத்தை பதிவு செய்கிறார்யையக்குநர் மு.களஞ்சியம்.

இதேபோல், தமிழ் திரைப்பட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்தில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்ளையக்குநர் சேரன்.

இது குறுத்து பேசியுள்ள களஞ்சியம், "வெறும் 25 லட்சம் வாங்கிக்கொண்டிருந்த நடிகனுடைய சம்பளம், கடந்த மூன்றாண்டுகளில் 5 கோடியாக உயர்ந்திருக்கிறது. 50 லட்சம் வாங்கிக்கொண்டிருந்தவனின் சம்பளம் 10 கோடியாக உயர்ந்திருக்கிறது. இயக்குநர்களின் சம்பளமும், இசையமைப்பாளர்களின் சம்பளமும் பல கோடிகளுக்கு உயர்ந்திருக்கிறது.
ஆனால், தொழிலாளிக்கு மட்டும் 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதிமுறையின் அடிப்படையில்தான் ஊதியம் என்றால், என்ன நியாயம்? மூன்று வருடத்திற்கு ஒருமுறை என்கிற சம்பள உயர்வை நீங்கள் நடைமுறைபடுத்தியிருந்தால், அவன் ஏன் போராட்டத்தில் இறங்கப்போகிறான்?" என்கிறார்.

No comments: