Friday, October 28, 2011

ஏன் எதிர்க்கவேண்டும் ‘ஏழாம் அறிவை’?

 ‘‘இந்த நாடு நாசமாகப் போயிருப்பதற்கு மூன்று காரணங்களை படத்தில் சொல்கிறார் கதாநாயகி ஸ்ருதிஹாசன். அவை "Reservation, Recommendation and Corruption". அய்யா பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை, நாடு நாசமாகப் போனதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்லும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது முருகதாஸ் அவர்களுக்கு!’’ -எழில் அரசன்.

-இதை மனதில் வைத்துக்கொண்டு வாசிப்புக்கு வாருங்கள்.
 "ஏ.ஆர்.முருகதாஸின் ‘எச்சில் அறிவு’" -இக்கட்டுரைக்கு முதலில் நான் வைத்த தலைப்பு இதுதான்.

“என்னடா இது, எட்டாவது அறிவுகூட கேள்விப்பட்டிருக்கோம். இவன், ‘எச்சில் அறிவு’ன்னு புதுசா ஒண்ணை சொல்றானே?”ன்னு யோசிக்காதீங்க.

‘‘இந்தப் படத்தைப் பார்த்தா, உங்க மயிரெல்லாம் நட்டுக்கும்’’னு சொல்கிறாரே முருகதாஸ்!

மயிர் நட்டுக்கொள்கிற அளவுக்கு அவரிடம், ‘கெத்து’(வீரம்) இருக்கவேண்டாமா?

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம், உன்போல் இரந்துண்டு வாழமாட்டோம்’’ என்று சிவனுக்கே சவால்விட்டுப் பேசுகிறாரே நக்கீரர். அப்படிப்படிப்பட்ட நக்கீரர் பரம்பரையில் வந்தவர் அல்லவா நீவீர். அந்த வீரம், தில்லு, உங்களுக்கு இருக்கணுமா வேண்டாமா?

(பட், ‘சங்கறுக்கிறது’ன்னா வேண்டாதவன் கழுத்தை அறுக்கிறது இல்லைங்க. அதைச் சிலபேர், ‘வலம்புரிச் சங்கு’ன்றான், சிலபேர் ‘ஆவுரிச் சங்கு’ன்றான். அது வேற கதை.)

நாம விஷயத்துக்கு வருவோம். ‘ஏன் நான் எச்சில் அறிவு’ங்கிறேன்?

தமிழன்னா, வீரம் வேணும்ல? கண்ட இடத்துல கையேந்தி பிச்சை எடுக்கக் கூடாதுல்ல?

ஓ.கே. உன்னால முடியல. மீறி, பிச்சை எடுத்துட்டீங்க. கம்முனு, ஃபிரன்ட்டையும் பேக்கையும் பொத்திட்டு ஓரமா போய் குந்திக்கணும்.

வாய் கிழிய உதார் விடக்கூடாது.

உனக்கு மட்டுமா இங்கே ஏழாம் அறிவு இருக்கு? எங்களுக்கும்தான் இருக்கு. நாங்களும்தானே நக்கீரர் பரம்பரை.

ஏற்கெனவே, ‘தமிழ் உணர்வைக் காசாக்குகிறதா ‘ஏழாம் அறிவு’ன்னு ஒரு பதிவு போட்டேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருக்கலாம்.

‘‘இவங்க எப்பவுமே இப்படித்தாம்பா. ‘வினவு’ மாதிரி எல்லாத்துக்கும் குத்தம் சொல்வாங்க’’ன்னு நினைக்கலாம். அப்படி நெனச்சா அது தப்புங்க.

‘இல்லாத அறிவை’ எடுக்க, எங்கெங்கே கைநீட்டி, எச்சிலையை வாங்கினார் அய்யா முருகதாஸ்’னு ஒரு பட்டியல் போடுறேன். பாத்துக்கங்க:

1. பாம்பே சர்கஸ்
2. KFC
3. Indian oil extra premium
4. Barath petroleum
5. Durable Chrome Factory
6. Vodafone
7. Aircel
8. State bank of India
9. NAC Jewellers
10.Landmark
11.Fast track
12.Nilgiris
13.Lions Club
14.7g systems
15.Sea land cargo
16.Natural spa

-இவ்ளோதான், என் கண்ணுல பட்டது.

“இது என்னடா, புதுக் கதையா இருக்கு. இதுக்கும் எச்சிலைக்கும் என்ன சம்பந்தம்?”னு மீண்டும், மீண்டும் யோசிக்கிறீங்களா? நல்லா யோசியுங்க.

லிஸ்ட்ல போட்ட கம்பெனி மட்டுமில்லைங்க, ஒரு திரைப்படம் என்கிற வகையில், இயக்குநரின் அனுமதி இல்லாமல், சின்னதொரு ‘சுண்டெலி மயிரைக்கூட’ நீங்கள் திரையில் காட்ட முடியாது.

தயாரிப்பாளரோ, நடிகரோ அதில் தலையிட முடியாது. படத்துக்கான ஒப்பந்தம் போடும்போதே, இது குறித்து தெளிவாக விளக்கிவிட்டேதான் கையெழுத்திடுகிறார்கள். ‘இப்படி கையெழுத்திடக்கூடிய, நக்கீரரின் உண்மையான வாரிசுகளும் இங்கே இயக்குநர்களாக இருக்கிறார்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது. இது சினிமா உலக நண்பர்களுக்கு தெரியும்.

எனவே, ‘‘சுண்டெலி மயிரைக்கூட காட்ட முடியாது என்கிற நிலைமை இருக்க, இத்தனை கம்பெனிகள் திரைக்குள் நுழைந்தது எப்படி?’’

அத்தனையும் காசு ஸார், காசு.

டி.வி.ல விளம்பரம் காட்டினா, எப்படி செகன்டுக்கு செகன்டு ரேட்டு வசூலிக்கிறாங்களோ, அப்படித்தான் சினிமாவிலேயும். காட்சிக்கு நடுவே தனியார் நிறுவன விளம்பரங்கள் வந்தால், ஒவ்வொரு செகன்டும் லட்ச லட்சமாய் கொட்டும். அதைத்தான், அய்யா ஏயாரு முருகதாஸும் செஞ்சிருக்கார்.

இன்னும், சுடர்மணி ஜட்டி விளம்பரம் தவிர, மற்ற எல்லா விளம்பரங்களிலும் அவுத்துப்போட்டு ஆடி, அதற்கெனவே உள்ள ஆர்டிஸ்ட்டுகளின் வயிற்றில் அடித்த(இது மறைமுக அடிங்க) ‘ஆறு பட்டெக்ஸ்’(but, இங்குள்ள பட்டெக்ஸை, 'வேட்டை நாய் தொகுதி' என்கிறது லிஃப்கோ) தம்பிக்கு இது நன்றாகவே தெரியும்.

but, ஒன் திங். six pack is not a decision authority. இட்ஸ் ஒன்லி a நாடி நரம்பெல்லாம் முருக்கினதாஸ் கம்பெனி முடிவு.

ஆனால், இதைக்கூட தப்பிலைன்னு நீங்க வாதிடலாம்.

‘‘ஒண்பது பேர் சேர்ந்து அடிக்கிறதுக்கு பேர் வீரம் இல்லை, துரோகம்.(இந்த துரோகத்துல ஒண்ணு, உங்க ‘மம்மி கன்ட்ரி’யும்தானே மிஸ்டர் முருகதாஸ்? அதை எதிர்த்து ஏன் பேசவில்லை? செலக்ட்டிவ் அம்னீசியாவா?)

தமிழனா இருந்தா, திருப்பியடிக்கணும்’’ என்கிற வசனம் இருந்ததால், இல்லாத அறிவை திரையிட முடியாது என்று திருப்பி அனுப்பியதே இலங்கை அரசு.

வீரனா இருந்திருந்தால் என்ன பண்ணியிருக்கணும்?

‘ஒன்ஸ் மோர் ஓல்டு டயலாக்கு.’

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம். உன்போல் இரந்துண்டு(இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடம்) வாழமாட்டோம்’’ என்று சொல்லிட்டு வீரனாக அல்லவா திரும்பியிருக்கணும். இங்குள்ள தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களும் சுருதி மூலமாக தமிழ்ச் சுருதியேற்றும் நீங்கள், ராஜபட்சே முன் வாலைச் சுருட்டி back-ல் வைத்துக்கொண்டது ஏன்?

‘‘நக்கிவிட்டீர்களே அய்யா ராஜபட்சே காலை. நீக்கிவிட்டீர்களே அய்யா வீரஞ்செறிந்த ரோலை’’

நீங்களே நீக்கிட்டதால, ‘‘அடச்சீ, இது வெறும் குத்தாட்டப் படம்தானே’’ என்று ராஜபட்சேவும் விட்டுவிட்டானே அய்யா தியேட்டருக்குள்ளே... கடைசியில் என்ன ஆச்சு?

“வெட்டி வேலாயுதம், இல்லாத அறிவு’ ரெண்டு படத்துக்கும், பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.” -newyarl.com

இப்போது ராஜபட்சேவுக்கு மிகுந்த சந்தோஷம். “எங்க இந்த நாய்ங்களெல்லாம், ‘சுதந்திரம், போர்க்குற்றம், ஐ.நா.சபை., சேனல் -4’னு நமக்கெதிரா செயல்படப்போகுதோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நண்பர் முருகதாஸ் புண்ணியத்துல, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க, விசய்க்கும், சூர்யா’வுக்கும் சொம்பு தூக்கிட்டு சந்தோசமா இருக்கோம்’னு சொல்லாம சொல்லிட்டானுங்க. இனி, ஐ.நா சபையே ஆய்வுக்கு வந்தாலும் கவலையில்லை”ன்னு பாக்கிற இடமெல்லாம் சொல்லிக்கிட்டு திரியிறாராமே...

எனவே, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேராபத்தையும் மறந்து, சுருதி மூலமாக தமிழுணர்வை சுருதியேற்றிக்கொண்ட தமிழர்களே! இப்போது புரிகிறதா, “ஏன் எதிர்க்கவேண்டும் ‘இல்லாத அறிவை’?” என்பது!

ஜெயிக்கப்போவது யார்? தமிழ்நாட்டு பொருக்கிகளா, யாழ்ப்பாண பொருக்கிகளா?


தீபாவளித் திருநாள், தமிழர் பிரதேசங்கள் மட்டுமன்றி, இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் எப்படி, தீபாவளித் திருநாளையொட்டி பிரபலமானவர்களின் படங்கள் திரையிடப்பட்டனவோ, அப்படியே இலங்கையிலும் திரையிடப்பட்டன.
ஈல டம்ளர்களா: வெறும் பேண்டு வாத்தியம் பத்தாது. இந்த மாதிரி பால்காவடி தூக்கணும், அலகு குத்தணும், மொட்டை அடிக்கணும். சரியா?

அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் உருவான ‘ஏழாம் அறிவும்’, விஜயின் நடிப்பில் உருவான ‘வேலாயுதமும்’ திரையிடப்பட்டன.
பொதுவாக, இப்படியான நடிகர்களுக்கு இந்தியாவில்தான் பாலாபிஷேகமும் பூசை வழிபாடுகளும் செய்வார்கள். இவ்வளவு ஏன், குஷ்புவுக்கே கோவில் கட்டி வணங்கும் கலாச்சாரமும் அங்கு உள்ளது. அப்படியிருக்க, ‘‘சென்ற தீபாவளித் தினத்தன்று, இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் நடைபெற்ற கூத்துக்களும், கும்மாளங்களும், இந்தியாவில்கூட இதுவரை நடைபெற்றதில்லை’’ எனலாம்.

பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கள் வயிற்றுக்கும் மதுவால் அபிஷேகம் செய்துகொள்ளப்பட்ட பின்பே, இவ்வாறான வீரசாகங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதே அவமானகரமான உண்மை. கொடுமை என்னவென்றால், அரசாங்கம், மதுவின் வரியை அதிகரிக்க, அதிகரிக்க, அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு அதிகரித்துச் செல்கின்றது.

யாழ்ப்பாணச் சந்திகளில் நின்று பேண்டு வாத்தியம் வாசிக்கும் இளைஞர்கள் படும் பாடு, அவர்களின் குத்தாட்டங்கள்... அடடா! நாங்கள், ‘‘தமிழகத் தமிழர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல’’ என்றவாறு நடந்தேறுகின்றன. சிலர், திருகோணமலையில் சினிமா பார்க்கவென பாரிய போராட்டம் நடத்தி, காயமடைந்து, வைத்தியசாலையிலும் அனுமதி பெற்றுள்ளனர். இவங்கள், வடிவா மட்டக்களப்புப் பொடியல்போல, பால் ஊற்றவில்லைபோல. அதுதான் இவங்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியல கிடக்கிறாங்கள்.

மானங்கெட்ட ஆட்டம் பார்க்க, மானங்கெட்ட ஆட்டத்தில் க்ளிக் செய்யுங்கள்.


ஆதிகாலத்தில், இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட மனித இனம், பின்பு கடவுளுக்கு வடிவம் கொடுத்து வணங்கி வந்தது. இவ்வாறு வணங்கும் போதும், பூசை வழிபாடுகளைச் செய்து பாலாபிஷேகம் செய்யும்போதும் ‘கடவுள் நேரில் வந்து அருள்புரிய மாட்டாரா’ என்ற நம்பிக்கையோடு வணங்கினார்கள்.

ஆனால், இன்று? அதற்கெல்லாம் கவலை இல்லை. ‘‘சூரியாவுக்கும், விஜய்க்கும் பூஜை செய்து, பாலாபிஷேகம் செய்தால் அவங்கள் நேரில வந்திட்டுப் போவாங்கள். ஒரு கஷ்டமும் இருக்காது.’’ என்று நினைக்கிறார்கள். மீறி, இதையெல்லாம் செய்யாமல் படம் பார்க்கப் போனால், ‘விஜய் குற்றம், சூரியா குற்றம்’ எல்லாம் உங்களைச் சூழ்ந்து போடும். எனவே, வடிவா பாலை ஊத்திட்டு, படம் பார்க்கப் போங்கடா...!

*அனுப்புங்கோ! அனுப்புங்கோ! வெளிநாட்டில இருந்து நல்...லா அனுப்புங்கோ! அப்பத்தான் நாங்கள், இன்னும் அதிகமா பேண்டு இசைக் கருவிகளை வாங்க முடியும்.

நன்றி: http://newyarl.com/

Tuesday, October 25, 2011

தமிழ் உணர்வை காசாக்குகிறதா ஏழாம் அறிவு?

‘‘போதி தர்மரை, தமிழர் என்றும், சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுத் தந்தவர் என்றும்’’ சொல்கிறது ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.

image/ta.wikipedia.org/Yoshitoshi

‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600-ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன். 

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,
 
‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.


‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார்.ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

தரவுகள்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பவுதமும் தமிழும்’ மற்றும் தமிழ் விக்கிபீடியா. கருத்துப் பிழைகள் இருப்பின், தயவு செய்து சுட்டிவிட்டுச் செல்லவும்.