Friday, October 28, 2011

ஜெயிக்கப்போவது யார்? தமிழ்நாட்டு பொருக்கிகளா, யாழ்ப்பாண பொருக்கிகளா?


தீபாவளித் திருநாள், தமிழர் பிரதேசங்கள் மட்டுமன்றி, இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் எப்படி, தீபாவளித் திருநாளையொட்டி பிரபலமானவர்களின் படங்கள் திரையிடப்பட்டனவோ, அப்படியே இலங்கையிலும் திரையிடப்பட்டன.
ஈல டம்ளர்களா: வெறும் பேண்டு வாத்தியம் பத்தாது. இந்த மாதிரி பால்காவடி தூக்கணும், அலகு குத்தணும், மொட்டை அடிக்கணும். சரியா?

அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் உருவான ‘ஏழாம் அறிவும்’, விஜயின் நடிப்பில் உருவான ‘வேலாயுதமும்’ திரையிடப்பட்டன.
பொதுவாக, இப்படியான நடிகர்களுக்கு இந்தியாவில்தான் பாலாபிஷேகமும் பூசை வழிபாடுகளும் செய்வார்கள். இவ்வளவு ஏன், குஷ்புவுக்கே கோவில் கட்டி வணங்கும் கலாச்சாரமும் அங்கு உள்ளது. அப்படியிருக்க, ‘‘சென்ற தீபாவளித் தினத்தன்று, இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் நடைபெற்ற கூத்துக்களும், கும்மாளங்களும், இந்தியாவில்கூட இதுவரை நடைபெற்றதில்லை’’ எனலாம்.

பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கள் வயிற்றுக்கும் மதுவால் அபிஷேகம் செய்துகொள்ளப்பட்ட பின்பே, இவ்வாறான வீரசாகங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதே அவமானகரமான உண்மை. கொடுமை என்னவென்றால், அரசாங்கம், மதுவின் வரியை அதிகரிக்க, அதிகரிக்க, அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு அதிகரித்துச் செல்கின்றது.

யாழ்ப்பாணச் சந்திகளில் நின்று பேண்டு வாத்தியம் வாசிக்கும் இளைஞர்கள் படும் பாடு, அவர்களின் குத்தாட்டங்கள்... அடடா! நாங்கள், ‘‘தமிழகத் தமிழர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல’’ என்றவாறு நடந்தேறுகின்றன. சிலர், திருகோணமலையில் சினிமா பார்க்கவென பாரிய போராட்டம் நடத்தி, காயமடைந்து, வைத்தியசாலையிலும் அனுமதி பெற்றுள்ளனர். இவங்கள், வடிவா மட்டக்களப்புப் பொடியல்போல, பால் ஊற்றவில்லைபோல. அதுதான் இவங்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியல கிடக்கிறாங்கள்.

மானங்கெட்ட ஆட்டம் பார்க்க, மானங்கெட்ட ஆட்டத்தில் க்ளிக் செய்யுங்கள்.


ஆதிகாலத்தில், இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட மனித இனம், பின்பு கடவுளுக்கு வடிவம் கொடுத்து வணங்கி வந்தது. இவ்வாறு வணங்கும் போதும், பூசை வழிபாடுகளைச் செய்து பாலாபிஷேகம் செய்யும்போதும் ‘கடவுள் நேரில் வந்து அருள்புரிய மாட்டாரா’ என்ற நம்பிக்கையோடு வணங்கினார்கள்.

ஆனால், இன்று? அதற்கெல்லாம் கவலை இல்லை. ‘‘சூரியாவுக்கும், விஜய்க்கும் பூஜை செய்து, பாலாபிஷேகம் செய்தால் அவங்கள் நேரில வந்திட்டுப் போவாங்கள். ஒரு கஷ்டமும் இருக்காது.’’ என்று நினைக்கிறார்கள். மீறி, இதையெல்லாம் செய்யாமல் படம் பார்க்கப் போனால், ‘விஜய் குற்றம், சூரியா குற்றம்’ எல்லாம் உங்களைச் சூழ்ந்து போடும். எனவே, வடிவா பாலை ஊத்திட்டு, படம் பார்க்கப் போங்கடா...!

*அனுப்புங்கோ! அனுப்புங்கோ! வெளிநாட்டில இருந்து நல்...லா அனுப்புங்கோ! அப்பத்தான் நாங்கள், இன்னும் அதிகமா பேண்டு இசைக் கருவிகளை வாங்க முடியும்.

நன்றி: http://newyarl.com/

1 comment:

Anonymous said...

so what?? already you peoples did many blunders in the name of LTTE and for the psychopath leader prabhakaran. this act is harmless when it compared to those days.