ஒரு ஐந்து நிமிடங்கள் தீபா வெங்கட்'டுடன் பேச நேர்ந்திருந்தால் நிச்சயமாக சிவாஜி படத்தில் ஸ்ரேயாவைத் தேடிப் போயிருக்க மாட்டார் ரஜினி. பழகுவதற்கு அத்தனை இனிமையாக இருக்கிறார் தீபா வெங்கட். "யாருடைய ஈகோவையும் ஸ்பாயில் பண்ணுவது மாதிரியான நடவடிக்கைகளில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை. எல்லோருடனும் ஃபிரண்ட்லியாக இருக்கவே விரும்புகிறேன், அப்படியே நடந்து கொள்கிறேன்'' என்கிறார். பேசும் போது அதை உணர முடிந்தது. பார்க்க பளிச்சென்று முதல் பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடுகிறவரிடம் எல்லாமே பர்ஃபெக்ட் ஆக இருக்கிறது.
பெண்கள் கற்றுக் கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன தீபா வெங்கட்'டிடம். அளவான மற்றும் அழகான மேக்கப், அதற்கேற்ற உடைகள், வண்ணங்கள். அணிகலன்கள் என்று பாத்தோமானால் ""அணிந்திருக்கும் சேலை அதற்கேற்ற மாலை'' என்று அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது. "எப்படிங்க இதெல்லாம்?" என்றால், "தங்களைத் தாங்களே அழகு படுத்திக் கொள்வதென்பதும் ஒரு கலைதான். நம்மை நாமே ரசிப்பதும் ஒரு சந்தோஷமான விஷயம். கண்ணில் மெல்லியதாக மை விடுவதற்குக்கூட மெனெக்கட வேண்டியிருக்கிறதே! ஆள் பாதி ஆடை பாதி என்கிறார்கள். இங்கே அறிமுகம் இல்லாதவர்களிடம் ஆடை தான் நம்மைத் தீர்மாணிக்கும் சக்தியாக விளங்குகிறது.
அதனால் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்பது வாழ்க்கையில் தவிற்க முடியாத ஒரு விஷயம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக மனசு தான் அழகைத் தீர்மாணிக்கிறது என்பதே உண்மை. மனசு சந்தோஷமாக இருக்கிற போது அது முகத்திலும் வெளிப்பட்டு மற்றவர்களையும் தொற்றிக் கொள்கிறது. எப்போது உடலும் மனசும் சந்தோஷமாக இருக்கிறதோ அப்போது இந்த உலகமே சந்தோஷமானதாக மாறிவிடுகிறது'' என்கிறவர்,
"உடைகளைப் பொறுத்த வரை ரொம்ப ஃபேஷனாவும் இல்லாம, ரொம்பப் பட்டிக்காடாகவும் இல்லாம கரெக்டா இருக்கேன்னு நம்புறேன். ஜீன்ஸ் போட்டாலும் கிளாமர் ஓவராகாமல் பார்த்துக் கொள்கிறேன். ப்ராக்டிகலான சில விஷயங்கள்'னு பார்த்தா முன்னாடி எனக்கு முகத்துல பருக்கள் வந்து தொல்லை கொடுத்தது. ரெண்டே மாசம் ப்ராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செஞ்சதுல உடம்பில் ஆக்ஸிஜன் கூடி பருக்கள் சுத்தமாக மறைந்து சருமம் நல்ல பளபளப்பு ஆகியிருக்கு. டாக்டர் எழுதிக் கொடுத்த மெடிகேட்டட் சோப்'பை மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒரே வரியைல சொல்லணும்னா "ஐ லவ் மைசெல்ஃப்'. இது தான் என் அழகின் ரகசியம்'' என்கிறார்.
நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? படிக்கையில் என்னவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது?
நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? படிக்கையில் என்னவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது?
ரோம்ப சின்ன வயசிலயே எனக்கு நடிப்பின் மீது ஆசை வந்துவிட்டது. அது எந்த வயசுன்னு கூட ஞாபகமில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலேயும் ஸ்கூல் நாடகங்களில் கலந்து கொள்வதை தவறவிட்டதே இல்லை. இந்த பயிற்சி தான் கே.பி. சாரின் டி.வி. சீரியலுக்குள் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. படிக்கும் போதே நடிக்க வந்துவிட்டாலும் பரீட்சையில் நான் கோட்டைவிட்டதில்லை. படிக்கக் கிடைக்கும் நேரம், மற்ற மாணவர்களை விட எனக்கு மிகவும் குறைவு என்பதால் அதிக அக்கறையுடன் படித்தேன். +2வில் 75% மார்க் வாங்கியதைப் பார்த்து பிரின்சிபல் என்னைப் பாராட்டினாங்க.
ஒரு சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகணும்'ங்கறது தான் என்னோட பள்ளிக்கூட ஆசையாக இருந்தது. அதனால நடிக்க வந்த பிறகும் நான் படிக்கத் தேர்ந்தெடுத்தது ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட் தான். இப்போ அது என் அன்றாட வாழ்க்கைக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கிறது. நாம் சம்பாதிக்கிற பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி, பொருட்களின் மீதான வரிவிகிதம் எப்படி இருக்கு, ஷேர் மார்க்கெட் நிலவரம் என்ன? என்கிற பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு ஸ்டாக் புரோக்கர்கிட்ட நீங்க போகணும்னா அவங்க பேசுவது அத்தனையும் எதோ புரியாத பாஷையாகவே இருக்கும். இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் சுலபமா அந்த விஷயங்களைக் கையாள முடிகிறது.
உங்களை ஊக்கப்படுத்துகிற விஷயமாகவும், சோர்வடையச் செய்கிற விஷயங்களாகவும் எதைக் கருதுகிறீர்கள்?
"எனக்குக் கலைமாமணி விருது கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை சின்னத்திரையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். அதுவும் கலைஞர் கையால் வாங்கியது அதைவிட மகிழ்ச்சி. கலைஞர்கள் என்றில்லை, எல்லா மனிதர்களுக்குமே பாராட்டுதல் என்பது சந்தோஷமானதாகவே இருக்கிறது. பத்திரிகையில் பாராட்டிப் பேசும்போதோ, மற்றவர்கள் நம்மைப் புகழ்ந்து பேசும் போதோ யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். அப்படித்தான் நானும்.
அனால் நம்மைக் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால் நிச்சயம் மனசு வருத்தப்படத் தான் செய்யும். அதனால் வருத்தப்பட்டுப் பிரயோஜனமில்லை. விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்படுகிற விஷயங்களை என் வளர்ச்சிக்கானதாக நான் மாற்றிக் கொள்கிறேன். மொத்தத்தில் என் எல்லையை உணர்ந்து பயணம் செய்கிறேன். நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். நல்லா நடிச்சிருக்கேன்னு நீங்க எவ்வளவு பாராட்டினாலும் கர்வப்பட மாட்டேன். பந்தாவா இருக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஷயம்'' என்கிறார். விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லனும்னா தமிழ்ல தீபா வெங்கட்டுக்கு பிடிக்காத வார்த்தை "பந்தா...''
தீபா சொல்லும் 2 நீதிகள்:
தீபா சொல்லும் 2 நீதிகள்:
1. பளிச்சென மேக்கப் பளிச்சென மேக்கப் செய்து கொண்டிருப்பவர்களை அலட்டல் பார்ட்டிகள் என்று எண்ண வேண்டாம். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிற விஷயம்.
2. அடுத்தவர்களின் ஈகோவை சீண்டிப் பார்க்கும் போது தான் வெறுப்புக்கு ஆளாகிறோம். எனவே எல்லாரிடத்திலும் நட்பாகப் பழகுங்கள்.
1 comment:
I like Deepa Venkat acting very much. I used to watch her in Kolangal serial and Alli Rajjam. She always act very well.
Ramya
Post a Comment