Thursday, December 21, 2006

சாலை அதிர்வுகள்!


யாரென்று கேள் என்னை
நான் தமிழனா இந்தியனா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில்
எனது பெயர் இடம் பெறுமா?

குப்பையில் கண்டெடுத்தேன் அதனை
ஐயோ! அத்தனையும் இதயங்கள்

யாருக்கு வேண்டும் இது?
என்றெண்ணி வீசியிருப்பீர்கள்

தின்ன முடியாத சோற்றைக்கூட
கெட்ட பின் கொட்டுகிறீர்கள்

கண்களைச் சுழற்றுகிறது தூக்கம்
உறக்கத்தில் உங்கள் மூளை

கொஞ்சம் மெதுவாய்ப் போங்களேன்
உங்களால் சாலை அதிர்கிறது.

1 comment:

பிரதீப் said...

beautiful lines..saattayaal adippathu pol ullathu!