Thursday, December 21, 2006

நண்டுகள், நத்தைகள்


ஒரு விடுமுறை நாளில் சில நத்தைகளை பிடித்துக் கொண்டு இச்சிறுவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

ஒரு காலத்தில் அதாவது என் பள்ளிப் பருவத்தில், மழைக் காலம் தொடங்கிய பிறகு வயல் வெளியில் நடந்து சென்றால் கால் வைக்கவே இடம் இருக்காது. துள்ளிக் குதிக்கும் தவளைகளும், ஓடி விளையாடும் நண்டுகளும், ஊர்ந்து செல்லும் கணக்கிலடங்கா நத்தைகளும் என்று விளை நிலங்கள் செழிப்பாய் இருந்தது.


பூச்சிக்கு மருந்தடிக்கிறேன் பாரு'ன்னு சொல்லி சில பொறம்போக்குகள் எப்போது ஊருக்குள் வந்தானுங்களோ! அப்பவே போச்சி எல்லாம். யூரியா போட்றேன், அம்மோனியா போட்றேன்'னு சொல்லி ஏகப்பட்ட மருந்து கொடுத்தானுங்க. அத கெடுத்தானுங்கன்னு சொல்லலாம்.

அப்படியான கால கட்டங்களில் ''இன்றி மருந்து'' குடித்துவிட்டு செத்துப்போன இளவட்டங்கள் தான் ஏராளம். [வய‌லுக்கு தெளிக்கும் ஒரு திரவ பொருள்‍: இன்றி மருந்து]


வயலில் தெளிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகள் அங்கிருந்த நண்டு நத்தைகள், புழு பூச்சிகள், எலி பாம்புகள் என்று எல்லாவற்றையும் கொன்று குவித்தது.

பசிக்கு எதுவுமில்லா காலகட்டங்களில் கூடை கூடையாய், குடம் குடமாய் நத்தைகள், நண்டுகள் கொண்டுவந்து வேகவைத்து தின்பார்கள் மக்கள். வயலில் கிடைக்கும் இவை பல வியாதிகளுக்கு மருந்து.

இன்று எவ்வளவுதான் தேடினாலும் நண்டு நத்தைகள் அகப்படுவது மிகக் கடினம். இருக்கும் சில உயிரினங்களும் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு உய்ர் வாழ்வதால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அளவிலேயே இருக்க நேரிடும்.

No comments: