Friday, November 17, 2006

'தேவிடியாப் பையா'ன்னு கூப்புட்றானுங்க''


''ஈ'' படத்தில் ஒரு காட்சி.

காட்சியை சொல்வதற்கு முன் ''ஈ'' என்கிற அந்த கதாபாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.


மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அழகான வட இந்தியப் பெண்மணி சென்னையில் திரிந்து கொண்டிருக்கிறாள். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பலர் அப்பெண்மணியை அவ்வப்போது பாலியல் வல்லுறவு கொண்டு சீரழிக்கின்றனர். அதன் பலனாய் அவள் கற்பமடைய, அதன் மூலம் பிறப்பவன் தான் 'ஈ' என்கிற ஈஸ்வரன். பேட்டை ரவுடியாக காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பவன்.


ஒரு கட்டத்தில் இந்த 'ஈ'யும், நெல்லைமணியும் ''[நெல்லைமணி லாப நோக்கத்திற்காக ஏழைகளின் மீது டாக்டர்கள் நோய்க்கிருமி பரிசோதனை செய்வதைக் கண்டு, கொதித்து மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு போராளியாக மாறியவன்]'' சந்தித்துக் கொள்ள நேரிடுகிறது.


அப்போது 'ஈ' நெல்லைமணி'யிடம் சொல்கிறான்,


''ஊர்ல, எல்லாம் என்ன எப்டி கூப்புட்றாங்க தெரியுமா?... 'தேவிடியாப் பையா'ன்னு கூப்புட்றானுங்க''.


அதற்கு நெல்லைமணி சொல்கிறான்,


''ஆமான்டா உனக்கு அப்பம்பேர் தெரிஞ்சா நீ இன்னா ஜாதி'ன்னு தெரிஞ்சிடும். ஜாதி தெரிஞ்சா மதம் இன்னான்னு தெரிஞ்சிடும். அப்புறம் நீ ஜாதித் தலைவனாயிடுவ, மதத் தலைவனாயிடுவ.'' [எப்படிப்பட்டவர் தலைவர் ஆகிறார் என்பதை கவனிங்க]''. உன்னால தான் அடுத்தவங்களுக்காக போராட முடியும்'' என்கிறான்.


தேவிடியா மகன்'னா நாமெல்லாம் எப்படி சிந்திப்போம். ஆனால் படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் எப்படி சிந்தித்துள்ளார் பாருங்கள்.


இந்த சிந்தனை மிகுந்த பாராட்டுக்குரியது. சமுதாயத்தில் அடித்தட்டு மக்களைப் பற்றி அக்கரை கொள்கிற ஒருவனால் தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்பது உண்மை. சினிமா உலகம் ஜனநாதனால் மறுமலர்ச்சி பெறட்டும்.

1 comment:

Anonymous said...

Parppana nayyinga thamilarkali soothiranu{thevadiyap payanu}sonnalum
pappathi jayalaitha,kamalolisangaraaachari mathiryana aalungalukkaka poradum thamilanai enna seyvathu