Saturday, January 1, 2011

"தமிழக முதல்-அமைச்சர் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து பாதுகாப்பு கொடுத்தார். அதனால் நான் தைரியமாக இருந்தேன்." ரஞ்சிதா கிளுகிளு!


பெரும் பரபரப்பைக் கிளப்புவார், ஒரு பூகம்பமே வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு, எக்ஸ்கிளுகிளுஸிவ் பேட்டி என்று ரேப்பரிலும், எட்டு கால தலைப்புச் செய்தியகவும் வரவேண்டிய ரஞ்சிதா, "ச்சப்"பென்று நேற்று பெங்களூர் பத்திரிகையாளர் முன்பு ஆஜராகிவிட்டார்.

ரஞ்சிதாவைக் காதலித்த லட்சக்கனக்கான டமில் இலைஞர்களில் அடியேனும் ஒருவன். இன்றுவரை அவர் மீதான எனது காதல் குறையவே இல்லை. அதே சமயம், அவர் அவிழ்த்துவிடுகிற பொய்களைத் தாங்கிக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.

எல்லா மக்களையும் போலவே ரஞ்சிதாவும் இயல்பு வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் எமது விருப்பமும், எமது நிர்வாகத்தின் விருப்பமும்கூட. ஆனால், இன்னமும் அவர், அந்த பெண் பித்தன் நித்தியானந்தனுக்கு ஜால்ரா போட்டு வருவதுதான் சகிக்க முடியாமல் இருக்கிறது. இதைக்கூட சகித்துக்கொள்ளலாம். இருக்கிற வேலைகளுக்கு மத்தியில் இந்தம்மாவுக்கு முதல்வர் பாதுகாப்பு கொடுத்தார் என்று சொல்லியிருப்பதுதான் எரிச்சலின் உச்சம்.

நெற்றைய பேட்டியில் ரஞ்சிதா கூறியிருப்பதாக தினத்தந்தி வெளியிட்ட செய்தி:

“நித்யானந்தா சாமியாருடன் நான் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது. இது முற்றிலும் பொய்யானது. அந்த வீடியோ காட்சிகள் சித்தரிக்கப்பட்டு திரித்து வெளியிடப்பட்டு உள்ளன. ஆபாச வீடியோ காட்சிகள் உண்மையானது என்று தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். என்றாலும் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. இதை நான் உறுதியாக கூறுகிறேன். அந்த காட்சியில் இருப்பது வேறு பெண்ணா? என்பது குறித்து நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது.

வீடியோ காட்சிகள் வெளியான சம்பவத்துக்கு பிறகு நான் தலைமறைவானேன் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அவ்வாறு நான் தலைமறைவாக இருக்கவில்லை. போலீசாரிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேசக்கூடாது என்று கடந்த பல மாதங்களாக எனக்கு கொலை மிரட்டல் வந்தது. போலீசாரிடம் இருந்து சட்டரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ எனக்கு ஏதாவது தொந்தரவுகள் வருமோ என்றும் நான் அஞ்சினேன். அதனால்தான் நான் கடந்த ஆண்டு மார்ச் 3-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றேன். பின்னர் ஜூன் 14-ந் தேதி மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். அதன் பிறகு நான் சென்னையில் தான் இருந்தேன்.

நானும் மற்ற பெண்களை போல் சராசரியான பெண்தான். நான் மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவள். அந்த மிரட்டலை கண்டு மிகவும் பயந்துபோய்விட்டேன். எனது உயிருக்கு பயந்து நான் வெளியே வரவில்லை. இப்போதும் தொடர்ந்து எனக்கு மிரட்டல் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து பாதுகாப்பு கொடுத்தார். அதனால் நான் தைரியமாக இருந்தேன். வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பனுக்கும், எனக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. லெனின் கருப்பன் பின்னால் இருந்து சில முக்கிய புள்ளிகள் செயல்படுகிறார்கள். என் மீது வீண்பழி போடப்பட்ட பிறகும், எனது குடும்பத்தினர் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

நித்யானந்தாவின் லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி. மற்றவர்களை போல் நானும் ஆசிரமத்திற்கு வந்து போனேன். நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. திட்டமிட்டு சதி செய்து என்னை பிரச்சினையில் சிக்கி வைத்துவிட்டனர். வீடியோ காட்சிகள் வெளியான நாளில் இருந்து மிகவும் வேதனைப்பட்டு வருகிறேன். என்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயற்சி செய்தார். நான் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்தபோது எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடவில்லை. அவ்வாறு என்னிடம் யாரும் கையெழுத்தும் வாங்கவில்லை.

இப்போது கூட வக்கீல்கள் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் நான் வெளியே வந்து உங்களிடம் பேசுகிறேன். நான் சினிமாவுக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிறது. எனது சினிமா வாய்ப்புகள் எதுவும் பாதிக்கவில்லை. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு கொடுத்தால், லெனின் கருப்பனை பின்னால் இருந்து இயக்குபவர்கள் குறித்த விவரங்களை பகிரங்கப்படுத்துவேன்.”

இதில், லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயற்சித்ததாக என் கனவுக்கன்னி கூறியிருப்பதுதான் காமெடியின் உச்சம். எப்படி? 80-களில் வெளியான தமிழ்ப்பட ரேப் சீன்போல லெனின் கருப்பன் முயன்றிருப்பாரோ! நித்தியும், ரஞ்சியும் டெய்லி ஜல்சா செய்றதை பார்த்துட்டு, எனக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்னு கேட்டிருப்பார். இதைப்போய் ரேப்’னு சொன்னா எப்படி ரஞ்சி? ச்சீ போ! உஅனக்கும் உண்மை பேசத் தெர்ல, உன் கூட்டாளி நித்திக்கும் உண்மை பேசத் தெர்ல.

பார்ட்-2

ரஞ்சிதாவின் உளறலை மறுத்து லெனின் கருப்பன் பேசியதை தினமலர் வெப்ஸைட் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது. இங்கே க்ளிக்குங்கள்....

No comments: